செய்திகள் :

சென்னை: வீட்டு ஓனர் வீட்டில் கைவரிசை காட்டிய பெண் - போலி சாவி தயாரித்தது அம்பலம்

post image

சென்னை, தண்டையார்பேட்டை, விநாயகபுரம் 10-வது தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரின் மனைவி பவானி. இவர் கடந்த 02.03.2026-ம் தேதி திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது பீரோவிலிருந்த 9 1/2 சவரன் எடையுள்ள 3 தங்கச் செயின்கள் திருட்டுப் போயிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த பவானி, கதவின் பூட்டு உடைக்கப்படாமல் நகைகள் எப்படி திருடப்பட்டது என குழப்பமடைந்தார். பின்னர் இது குறித்து காசிமேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் பவானி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பவானி வீட்டின் 2-ம் தளத்தில் வாடகைக்கு குடியிருக்கும் பவித்ரா எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பவித்ராவிடம் போலீஸார் விசாரணை தொடங்கினர். விசாரணைக்குப்பிறகு பவித்ராவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது
கைது

இதுகுறித்து காசிமேடு போலீஸார் கூறுகையில், ``பவானி வீட்டின் 2-வது தளத்தில் பவித்ரா வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு பவானி வீட்டின் சாவி கீழே கிடந்திருக்கிறது. அதை எடுத்த பவித்ரா, போலி சாவி ஒன்றை தயாரித்திருக்கிறார். பின்னர் பவானி வீட்டில் இல்லாத போது போலி சாவி மூலம் வீட்டை திறந்த பவித்ரா, பீரோவிலிருந்த நகைகளை திருடியிருக்கிறார். பவானி வீட்டில் நகைகள் திருட்டு போனது குறித்து எங்களிடம் புகாரளித்தார். வீட்டின் பூட்டு உடைக்காமல் நகைகள் திருட்டு போயிருந்ததால் தெரிந்தவர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதுதொடர்பாக பவானியிடம் விசாரித்தபோதுதான் அவர், வீட்டின் சாவி தொலைந்த தகவலை எங்களிடம் தெரிவித்தார். அப்போதுதான் பவானி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பவித்ரா மீது எங்களின் சந்தேகப் பார்வை விழுந்தது. பின்னர் பவித்ராவிடம் விசாரித்தபோது நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள், போலி சாவிகளையும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

ராணிப்பேட்டை: விஷவாயு தாக்கி மயங்கிய 4 தொழிலாளிகள் - பாதுகாப்பு உபகரணம் வழங்காமல் அலட்சியம்

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட வி.சி.மோட்டூர் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனமான `ராணிடெக்’ செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ராணிடெக்கிற்குச் சொந்தமான கழிவ... மேலும் பார்க்க

மூன்று கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட ரூ.5 கோடி நகைகள் கொள்ளை! - கத்தி முனையில் சிக்கிய வியாபாரி

விழுப்புரம் வீராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், மொத்த தங்க நகை வியாபாரி. சென்னையில் மொத்தமாக தங்கம் வாங்கி, அதை கம்மல், ஜிமிக்கி, செயின் போன்ற ஆபரணங்களாக செய்து கடைகளுக்கு விற்பது இவரது ... மேலும் பார்க்க

கோவை: ஹோட்டல் உரிமையாளர் கொலை; ஆட்டோ ஓட்டுநர் வெறிச்செயல்; அதிர்ச்சி பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீபன். இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது ஹோட்டலில் அன்பு எஸ்தர் என்பவர் பணியாற்றி வந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் எ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; "அவர் ஒரு சூப்பர் ஸ்டார்" - இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?

நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவ... மேலும் பார்க்க

முக்கோண காதலில் மோதல்: மதுவிருந்து... காதலன் துணையோடு லிவ்இன் பார்ட்னரை கொன்ற கன்னட துணை நடிகை

கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் பிந்து என்ற ஊர்மிளா. இவர் மோகன்ராவ் என்பவருடன் லின் இன் முறையில் வசித்து வந்தார். இதில் பிந்து மற்றும் மோகன்ராவ் ஆகிய இருவரும் ஏற்கனவே திருமணமாகி தங... மேலும் பார்க்க

திருத்தணி பேருந்து நிலையம்: `அண்ணா - கலைஞர்' மாற்றும் திமுக; அமைதி அதிமுக; டைப்பிங் மிஸ்டேக் நாதக!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ‘அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்’ செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இடநெருக்கடி காரணமாக திருத்தணி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதி... மேலும் பார்க்க