செய்திகள் :

ராணிப்பேட்டை: விஷவாயு தாக்கி மயங்கிய 4 தொழிலாளிகள் - பாதுகாப்பு உபகரணம் வழங்காமல் அலட்சியம்

post image

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட வி.சி.மோட்டூர் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனமான `ராணிடெக்’ செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ராணிடெக்கிற்குச் சொந்தமான கழிவுநீர் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஏழுமலை, சாந்தகுமார், ரமேஷ், இப்திகார் உல்கக் என்கிற நான்கு தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விஷவாயு தாக்கியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு நான்கு பேரும் துள்ளத் துடிக்க மயங்கினர். இதைப் பார்த்த பெண் தொழிலாளிகள் விரைந்து நான்கு தொழிலாளிகளையும் மீட்டு, முதலுதவி அளிக்க முயன்றனர். தொடர்ந்து, பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களை விரைவாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கும் தூக்கிசென்றனர்.

விஷவாயு தாக்கி மயங்கிய தொழிலாளிகள்

அங்கு நால்வருக்கும் தீவிர அளிக்கப்பட்டபோதும், ஏழுமலை என்ற ஒருவரின் உடல்நிலை மட்டும் மிகமோசமானதாகக் கூறி மேல்சிகிச்சைக்காக சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். முதற்கட்ட விசாரணையில், தொழிலாளிகளின் உயிரைப் பொருட்படுத்தாமல், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும் ராணிடெக் நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நிகழ்விடத்தில், விஷவாயு பரவலைத் தடுக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். பதைபதைக்க வைத்த இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட ரூ.5 கோடி நகைகள் கொள்ளை! - கத்தி முனையில் சிக்கிய வியாபாரி

விழுப்புரம் வீராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், மொத்த தங்க நகை வியாபாரி. சென்னையில் மொத்தமாக தங்கம் வாங்கி, அதை கம்மல், ஜிமிக்கி, செயின் போன்ற ஆபரணங்களாக செய்து கடைகளுக்கு விற்பது இவரது ... மேலும் பார்க்க

கோவை: ஹோட்டல் உரிமையாளர் கொலை; ஆட்டோ ஓட்டுநர் வெறிச்செயல்; அதிர்ச்சி பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீபன். இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது ஹோட்டலில் அன்பு எஸ்தர் என்பவர் பணியாற்றி வந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் எ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; "அவர் ஒரு சூப்பர் ஸ்டார்" - இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?

நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவ... மேலும் பார்க்க

முக்கோண காதலில் மோதல்: மதுவிருந்து... காதலன் துணையோடு லிவ்இன் பார்ட்னரை கொன்ற கன்னட துணை நடிகை

கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் பிந்து என்ற ஊர்மிளா. இவர் மோகன்ராவ் என்பவருடன் லின் இன் முறையில் வசித்து வந்தார். இதில் பிந்து மற்றும் மோகன்ராவ் ஆகிய இருவரும் ஏற்கனவே திருமணமாகி தங... மேலும் பார்க்க

திருத்தணி பேருந்து நிலையம்: `அண்ணா - கலைஞர்' மாற்றும் திமுக; அமைதி அதிமுக; டைப்பிங் மிஸ்டேக் நாதக!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ‘அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்’ செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இடநெருக்கடி காரணமாக திருத்தணி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதி... மேலும் பார்க்க

சென்னை: விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தி.மு.க கவுன்சிலர், அ.தி.மு.க பிரமுகர் கைதான பின்னணி!

சென்னையில் குடியிருக்கும் 25 வயதான இளம்பெண், விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த 25-ம் தேதி இவர், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் பணியிலிருந்தபோது திருவள்ளூரைச் சேர்ந்த பிரபாகர... மேலும் பார்க்க