செய்திகள் :

அமமுக MLA காமராஜுக்கு புதிய சிக்கல் - தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் கட்சி சார்பில் மனு

post image

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி, அக்கட்சி சட்டப்பேரவை சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளது. தவெக அரசின் நம்பிக்கை தீர்மானத்தின்போது கட்சியின் நிலைப்பாட்டை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் குற்றம்சாட்டியுள்ள அமமுக, கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜ், நம்பிக்கை தீர்மானத்தின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இது கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவுக்கு எதிரானது எனக் கூறிய அமமுக, முதலில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது. அதனைத் தொடர்ந்து, அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

JCD Prabhakar
சபாநாயகர் JCD பிரபாகர்

அமமுக பொருளாளர் கரிகாலன், சட்டப்பேரவை சபாநாயகரை நேரில் சந்தித்து மனுவை வழங்கினார். அந்த மனுவில், கட்சியின் உத்தரவை மீறி செயல்பட்டதன் மூலம் காமராஜ், அரசியலமைப்பின் 10-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள கட்சி தாவல் தடுப்புச் சட்ட விதிகளை மீறியுள்ளதாகவும், எனவே அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் ராஜினாமா செய்த ஆறு முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான தகுதி நீக்க கோரிக்கை மனுக்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், தற்போது அமமுக எம்எல்ஏ காமராஜ் மீதும் இதேபோன்ற நடவடிக்கையை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவு அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.

எனினும், தற்போதைய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் காமராஜ் இருந்து வருவதால் அவர் மீது உடனடி தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இறுதி முடிவு சபாநாயகரின் பரிசீலனைக்குப் பிறகே தெரியவரும்.!

`மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி'- ஆசிரியராக மாறிய ஓய்வுபெற்ற IPS

பொதுவாக அரசு அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் முன்னாள் டி.ஜி.பி சீமா அகர்வால் ஐ.பி.எஸ், ஓய்வ... மேலும் பார்க்க

மீண்டும் தொடங்கிய ட்ரம்பின் 'வரி' ஆட்டம்; இந்தியாவிற்கு சற்று குறைந்த வரி தான் - ஏன்? | Trump Tariff

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் போரையும் விடுவதாக இல்லை... வரியையும் விடுவதாக இல்லை போலும். 'அமெரிக்க பொருள்களுக்கு தங்கள் நாடுகளில் அதிக வரியை வசூலிக்கிறார்கள்' என்று ட்ரம்ப் அரசு, 2025-ம் ஆண்டு ஏப்ரல்... மேலும் பார்க்க

பெரம்பூர்: பிரசித்தி பெற்ற கோயில் எதிரே இயங்கும் டாஸ்மாக்; பட்டியல் `717'-லிருந்து தப்பியது எப்படி?

`பள்ளிக் கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே அமைந்திருக்கும் மதுபானக் கடைகள் அங்கிருந்து உடனடியாக அகற்றப்படும்.' - தவெக அரசு பதவியேற்ற அடுத்த சில தினங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார், முதல்வர... மேலும் பார்க்க

"இது சினிமா கிடையாது; Scene பண்ணுவதற்கு"- தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூலை.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "நீட் போராட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள், நிலைப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பன குறித்து ஓட்டு போட... மேலும் பார்க்க

காவிரி நீர் : டி.கே. சிவக்குமாரை நேரில் சந்திக்கும் விஜய்! - பலனளிக்குமா முதல்வரின் முயற்சி? | அலசல்

காவிரி நதிநீர் பிரச்னை என்பது தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான நீண்டகால நதிநீர் பங்கீட்டு தகராறாக மட்டுமல்லாமல், இரு மாநிலங்களின் அரசியல், விவசாயம், கூட்டாட்சி உறவு மற்றும் நீதித்துறை ஆகிய அனைத்தையும் உள... மேலும் பார்க்க

நீட் போராட்டம்: "உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?" - டெல்லி பல்கலைகழகத்திற்கு ராகுல் கண்டனம்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரகணக்கான மாணவர்கள் தொடர் போர... மேலும் பார்க்க