செய்திகள் :

மகாராஷ்டிரா: வெள்ளத்தால் 200 கிராமங்கள் துண்டிப்பு; 1 லட்சம் பேர் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

post image

மும்பை உட்பட் மகாராஷ்டிரா முழுவதும் இந்த வார தொடக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது.

அதோடு மாவட்டம் முழுவதும் மழை நீரில் பாலங்கள் மற்றும் சாலைகள் மூழ்கியுள்ளன. இதனால், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கியச் சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஹானு தாலுகாவில் உள்ள சைவன்-வாகடி சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தைக் கடக்கும்போது அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது. டிரைவர், கண்டக்டர் உள்பட 4 பயணிகள் பஸ்சுக்குள் சிக்கிக்கொண்டனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறுகள் மூலம் 6 பேரையும் மீட்டனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. போர்டி மற்றும் கோல்வாடி போன்ற இடங்களில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

மகாராஷ்டிரா கனமழை
மகாராஷ்டிரா கனமழை

பல வீடுகளுக்குள் மூன்று முதல் நான்கு அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரியாக 183.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தஹானு மற்றும் தலசாரி தாலுகாக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு நிரம்பி வழியும் ஆறுகள் மற்றும் நீரில் மூழ்கிய சாலைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 891 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தகானு, தலசாரி ஆகிய இரண்டு தாலுகாவிலும் மின் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

இதனால் மொபைல் சேவையும் பாதிக்கப்பட்டது. தலசாரி, தஹானு, வாடா, விக்ரம்காட், ஜவ்ஹர் மற்றும் மொகடா போன்ற பகுதியில் இருக்கும் 16 துணை மின் நிலையங்களில் தண்ணீர் புகுந்ததால் அங்கு மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், மின்கம்பிகள் அறுந்து விழுந்ததாலும், மின்கம்பங்கள் சேதமடைந்ததாலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் மின்சாரம் இன்றி தவித்தனர். அணைகள் நிரம்பி வழிவதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்குக் கூடுதல் தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் விரைந்துள்ளன. தகானுவிற்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறைவிடப்பட்டுள்ளது.

மும்பை கனமழை: "நாளை போய்விடலாம்னு சொன்னேன்; ஆனா..."- கட்டிடம் இடிந்ததில் குடும்பத்தை இழந்த நபர்

மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழை காரணமாக மான்கூர்டு பகுதியில் மன்குர்த் ஜனதா நகரில் இருந்த சட்டவிரோத நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 38... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: மீட்பு பணியில் மோப்ப நாய்கள் - மாயமானவர்களை தேடும் பணிகள் 2- வது நாளாக தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகில் உள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணித் தளத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக... மேலும் பார்க்க

"மஞ்சள் அலர்ட் அறிவிப்பு; ஆனால் `ரெட் அலர்ட்டுக்கு' இணையான மழை" வயநாடு நிலச்சரிவு பற்றி வி.டி.சதீசன்

கேரள மாநிலம், ​வயநாடு கள்ளாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் பத்துக... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: உயரும் உயிரிழப்பு எண்ணிக்கை; மாயமானவர்களை மண்ணுக்குள் தேடும் மீட்புக் குழுவினர்!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லாடி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மண்ணில் சிக்கியுள்ளனர். போக்குவரத்திற்காக இரட்டை சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் மழை... மேலும் பார்க்க

ஆங்காங்கே நிலச்சரிவு... சாலைகளை மூழ்கடித்த வெள்ளம் - மகாராஷ்டிராவை திணறடிக்கும் கனமழை!

மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாகப் போக்குவரத்து, ரயில் சேவைகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

மும்பையைப் புரட்டிப்போட்ட கனமழை: நான்கு மாடிக் கட்டடம் இடிந்து 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

மும்பையின் மான்கூர்டு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் நான்கு மாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில், 5 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் நான்கு பேர் ஒரே குடும... மேலும் பார்க்க