செய்திகள் :

`நாங்கள் சேர்ந்துதான் வாழ்வோம், பிரிக்க முடியாது' - ஒரே வாலிபரை திருமணம்செய்து கொண்ட 3 சகோதரிகள்

post image

ஒன்றாக இரட்டையர்களாக பிறந்த இரண்டு சகோதரிகள் ஒரு வாலிபரை திருமணம் செய்துகொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்டவரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்காவிட்டாலும், இது போன்ற திருமணங்கள் சட்டவிரோதமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மூன்று சகோதரிகள் ஒன்று சேர்ந்து ஒரே வாலிபரை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

அங்குள்ள அம்ரோகா மாவட்டத்தில் உள்ள தோரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவருக்கு சரோஜ், சாவித்ரி, சந்தோஷ் ஆகிய மூன்று மகள்கள் இருக்கின்றனர்.

இந்த சகோதரிகள் மூன்று பேரும் சேர்ந்து ஒரே வாலிபரை திருமணம் செய்துகொள்வது என்ற முடிவில் இருந்தனர். அவர்கள் சொன்னது போல் அங்குள்ள சாமுண்டா கோயிலில் மூன்று பேரும் ஒரே வாலிபரை திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் அக்னியை மூன்று முறை வலம் வந்து திருமணம் செய்து கொண்டனர்.

அதோடு ஒருவரை ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டனர். மேலும் அங்கு கூடியிருந்த பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டனர். இத்திருமணத்தில் பா.ஜ.க நகராட்சி தலைவர் ஒருவர் கலந்து கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. ஆரம்பத்தில் இது ரீல்ஸ் வீடியோ என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் உண்மையிலேயே அவர்கள் மூன்று பேரும் ஒரே வாலிபரை திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து சமூக ஊடகத்தில் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். அதில் நாங்கள் 100 சதவீதம் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர். அவை அனைத்தும் வைரலாகி இருக்கிறது.

நெட்டிசன்கள் நான்கு பேரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் மூன்று பெண்களின் பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர். மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் கணக்கு தொடங்கினர். அவர்கள் 27 வீடியோக்களை அதில் பகிர்ந்துள்ளனர். இதில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார்கள்.

CJP: `யார் அனுப்புறாங்கனு தெரியல; ஆனா குவியுது' - ஆன்லைன் ஆர்டர் மூலம் போராட்டகளத்தில் குவியும் உணவு

டெல்லியில் நீட் தேர்வு மோசடி, கல்வி சீர்திருத்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் அதிக அளவில் மாணவர்கள் மத்... மேலும் பார்க்க

`18 வயதைக் கடந்த திருமணமாகாத மகளின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமை' - கர்நாடகா உயர் நீதிமன்றம்

கணவன் மனைவி இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டால் மனைவியுடன் இருக்கும் குழந்தைகள் 18 வயதை கடக்கும் வரை அவர்களின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமையாகும். கர்நாடகா மாநிலம், மங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு - பெற்றோர் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள ரகுராமபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு 20 குழந்தைகள் தினம் தோறும் வருவது வழக்கம். இங்கு சொர்ணமாரி எ... மேலும் பார்க்க

மதுபானக்கடைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சிறுத்தை - 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்திருந்த மதுபானக்கடைக்குள் திடீரென சிறுத்தைப்புலி ஒன்று உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மதுபானக் கடை... மேலும் பார்க்க

பதநீரில் சீனி கலந்து போலி கருப்பட்டி - வரி ஏய்ப்பு; 5 வியாபரிகளுக்கு அபராதம் மட்டும் ரூ.38 கோடி!

புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது. ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.... மேலும் பார்க்க