செய்திகள் :

“அமித் ஷாவுக்காக காத்திருக்கும் ஆளுநர்.!” - ரிப்போர்ட் ரெடி!

post image

தமிழகத்தின் முதல்வராக விஜய் தேர்தெடுக்கபடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது.

போதிய பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க அல்லோலப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் அலுவலகத்திலிருந்து ரிப்போர்ட் ஒன்று ரெடியாகியுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய் நேற்று இரவு ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து தங்கள் கட்சிக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாக கடிதம் வழங்கினார்.

விஜய் - ஆளுநர் சந்திப்பு
விஜய் - ஆளுநர் சந்திப்பு

அந்த கடிதத்தில் த.வெ.க, காங்கிரஸ், சி.பி.ஐ,சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கடிதத்தோடு அ.ம.மு.க-வை சேரந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் ஆதரவு கடிதமும் இருந்துள்ளது.

த.வெ.க கொடுத்த ஆதரவு கடிதங்கள் விவரங்களை டெல்லிக்கு விவரமாக சொல்லியிருக்கிறார் அர்லேக்கர். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் ஆதரவும் த.வெ.க-வுக்கு கிடைத்துள்ளதை ஆளுநர் சொல்லியிருக்கிறார்.

இதை அறிந்த டெல்லி மேலிடம் கடும் டென்சனாகிவிட்டது. உடனடியாக தினகரனை தொடர்பு கொண்டு, என்ன நடந்து என கேட்டனர். அவர் தனது எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் ஏற்கனவே தன்னிடம் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டதாக சொல்லியிருக்கிறார்.

அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக ஆளுநரை சந்திக்க சொல்ல, அவசர அவசரமாக ஆளுநர் அலுவலகத்தி்ற்கு வந்தார். அங்கு ஆளுநரை சந்தித்து தனது எம்.எல்.ஏ-வை விலை பேசியிருப்பதையும்,குதிரை பேரம் நடப்பதையும் புகாராக சொல்லிவிட்டார்.

அதன்பிறகு எஸ்.காமராஜ் தினகரன் லைனுக்கு வந்துவிட்டார். தினகரன் எஸ்.காமராஜ் இருவருமே நள்ளிரவு ஆளுநரை சந்தி்த்து விளக்கம் கொடுத்தனர்.

அமமுக - டிடிவி.தினகரன்

அதன் அடிப்படையில் ஆளுநர் கொடுத்த ஆலோசனையின்படி கிண்டி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவரங்களை எல்லாம், இரவோடு இரவாக ஆளுநர் ரிப்போர்ட்டாக ரெடி செய்துவிட்டார்.

இன்று காலை மேற்கு வங்கத்தில் நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு அமித்ஷா சென்றுவிட்டு, மதியம் டெல்லி திரும்ப உள்ளார். அதன்பிறகு தமிழக ஆளுநர் அர்லேக்கர், அமித்ஷாவிடம் இந்த ரிப்போர்ட்டை அனுப்ப உள்ளார்.

அந்த ரிப்போர்ட் அடிப்படையில் தான் தமிழகத்தில் புதிய அரசு பதியேற்பதற்கான சாத்திய கூறுகள் அமையும் என்கிறார்கள். குதிரை பேரம் நடந்தது உறுதியானால், தமிழகத்தில் தேர்வான எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. டெல்லி தலைமையும் அந்த மூடுக்கே வந்துள்ளார்கள். அமித் ஷாவின் சிக்னலுக்காக மட்டுமே இப்போது ஆளுநர் காத்திருக்கிறார் என்கிறார்கள்..

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வரானார் சுவந்து அதிகாரி; பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்பு

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் தேர்தல் கமிஷனும், பா.ஜ.கவும் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டனர் என்று கூறி மம்தா... மேலும் பார்க்க

"என்ன வன்மம் பாருங்க; என்னை மிரட்ட பார்க்கிறாங்க!" - தவெக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் டிடிவி!

தமிழக அரசியல் சூழல் தற்போது பரபரப்பாக இருக்கிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திடீரென ஆளுநர் மாளிகை வந்து, 'அமமுக சார்பில் வென்ற காமராஜ், தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகப் போலிக் கடிதம் கொடு... மேலும் பார்க்க

"நல்ல முடிவெடுத்திருக்கிறார்கள்; தலைவர் சொல்வதுதான் எங்களுடைய நிலைப்பாடும்!" - வன்னி அரசு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் தவெகவிற்கு ஆதரவைத் வழங்குவதாக நேற்று அறிவித்தனர். இருப்பினும், தவெக-விற்கு இன்னும் பெரும்பான்மை பெறவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ... மேலும் பார்க்க

புதிய முப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட தமிழர் - யார் இந்த ராஜா சுப்ரமணி?

இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு ... மேலும் பார்க்க

"பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல!" - கமல்ஹாசன் காட்டம்

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆதரவு கோரி, தவெக, விசிக உள்ளிட்ட சில கட்சிகளுக்குக் கடிதமும் ... மேலும் பார்க்க

TVK: "பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது!" - மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்!

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சந்தித்த முதல் தேர்த... மேலும் பார்க்க