செய்திகள் :

'அமெரிக்காவிடம் பாகுபாடு' - சிறப்பு அதிகாரத்தின் கீழ், கனடா மீது 50% வரி விதித்த ட்ரம்ப்!

post image

சில கனடா பொருள்கள் மீது 50 சதவிகித வரியை விதித்து உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

கனடா மீது அமெரிக்கா சொல்லும் குற்றச்சாட்டு என்ன?

கனடா நாடு, அமெரிக்காவின் மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன பாகங்கள் ஏற்றுமதிக்கு எதிராகப் பாகுபாடு காட்டியும், நியாயமற்ற மற்றும் சமமற்ற வரிகளை விதித்தும் அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பிற நாடுகளின் வர்த்தகத்தில் பின்பற்றப்படுவதில்லை... பிற நாடுகளின் வர்த்தகத்திற்குக் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது கனடா.

ஏற்றுமதி-இறக்குமதி
ஏற்றுமதி-இறக்குமதி

இதனால், அமெரிக்க மோட்டார் வாகனங்கள் மீது கனடா விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை. இது அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாரத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு சட்டத்தின் படி...

கனடாவின் இந்தப் பாகுபாட்டிற்கு எதிராக அமெரிக்காவின் 1930-ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டத்தின் படி, அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராக ஒரு வெளிநாடு காட்டும் பாகுபாடு அல்லது சமமற்ற கட்டுப்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளை ஈடுகட்டுவதற்காக, அந்த வெளிநாட்டின் இறக்குமதிகள் மீது கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது.

இதனால்...

வருகிற ஆகஸ்ட் 19-ம் தேதி முதல், இதில் குறிப்பிட்ட கனடா பொருள்களுக்கு 50 சதவிகித கூடுதல் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட உள்ளது.

இந்த வரி, பிரிவு 338-ன் கீழ் அமல்படுத்தப்பட உள்ளது. காரணம், இந்தப் பிரிவின் கீழ், ஒரு வெளிநாட்டின் சமமற்ற வரி விதிப்பு அல்லது பாகுபாட்டினால் அமெரிக்க வர்த்தகத்திற்கு ஏற்படும் எந்தவொரு சுமை அல்லது பாதிப்பையும் ஈடுகட்ட, 50 சதவீதத்திற்கு மிகாமல் கூடுதல் மதிப்புக்கூட்டு வரிகளை அறிவிக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு.

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.Sivaசிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான்ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது" - பா.ரஞ்சித்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க