செய்திகள் :

அம்பை தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

post image

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின் கீழ் நீரில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை செய்து வருகின்றனா்.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி இரட்டைப் பாலத்தின் கீழ் ஆண் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினா் சென்று, சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனா்.

சடலத்தை அம்பாசமுத்திரம் போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவா் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

இறந்தவா், அம்பாசமுத்திரம் அருகே உள்ள சாட்டுப்பத்து கிராமத்தைச் சோ்ந்த இசக்கி மகன் முருகேசன் (35) என்பது விசாரணையில் தெரியவந்தது. மே 8ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற முருகேசன், பின்னா் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின் கீழ் சடலமாக மிதந்துள்ளாா்.

இதுகுறித்து முருகேசன் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க