செய்திகள் :

'தனிச் சின்னம் வேண்டாம்!'- ஒதுக்கபட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் மதிமுக

post image

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, கொமதேக 2, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-வுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்டிபிஐ உட்பட சில சிறிய கட்சிகள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் களமிறக்கப்பட உள்ளன.

அதேபோல மதிமுக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வைகோ
வைகோ

ஆனால் தற்போது மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

'கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?' - கொந்தளிக்கும் ஆதவ்!

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு தமிழக காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அ... மேலும் பார்க்க

விசிக: ``யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது.!" - ஆளூர் ஷா நவாஸ் விளக்கம்!

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்ப்படவில்லை. இதற்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படு வந்தத... மேலும் பார்க்க

'விஜய்யை பற்றியும் அவருடைய வேட்பாளரை பற்றியும் பேச மாட்டேன்' – இயக்குநர் சுந்தர்.சி

அதிமுக கூட்டணியிலுள்ள புதிய நீதிகட்சி சார்பாக மதுரை மத்திய தொகுதி வேட்பளாராக இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக இன்று மதுரைக்கு வந்திருந்த சுந்தர்.சி செய்தியாளர்களை சந... மேலும் பார்க்க

கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லியாக இருந்தது எப்படி தெரியுமா? | ‘வாவ்’ வியூகம் 11

‘வாவ்’ வியூகம் 11கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லிதேர்தல் அரசியலில் கட்சிகள் ஆட்சிக்கு வருவதும், ஆட்சியை இழப்பதும் கூட்டணியால்தான். சரியான கூட்டணி என்பது மக்கள் விரும்பும் கூட்டணியாகவும் இருக்க வே... மேலும் பார்க்க

"விஜய்யுடன் பேசி NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்.!"- மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்வதென்ன?

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார். புதுச... மேலும் பார்க்க