செய்திகள் :

"அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயார்" - தங்கம் தென்னரசு

post image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்து கொண்டு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, டிசம்பர் 4ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்கும் ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் தி.மு.க மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூல் வெளியீட்டு விழா - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் தேர்தலை முன்னிட்டு மாற்றமடைந்து வருகிறது. எந்தக் கூட்டணி யாருடன் சேருகிறது என்பது குறித்து பல ஊகங்கள் பேசப்பட்டாலும், தி.மு.கவிற்குக் கவலையில்லை" என்று அவர் தெரிவித்தார்.

“எந்தக் கூட்டணி யாருடன் சென்றாலும் எங்களுக்குக் கவலையில்லை. நரி வலம் வந்தாலும், இடம் சென்றாலும் நமக்குத் தொடர்பில்லை. முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அமைக்கும் கூட்டணியே எப்போதும் வெற்றிக் கூட்டணியாக இருந்து வந்துள்ளது; இனியும் அதுவே வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்று அவர் உறுதியாக கூறினார்.

“புயல் வந்தாலும் இறுதியில் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களில் கரையைக் கடக்கும்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் எந்தப் புயலும் பெரிய சவாலாக மாறாது. அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது” என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, எதிர்காலத்தில் உருவாகும் அரசியல் மற்றும் தேர்தல் சூழ்நிலைகளைக் கவனத்துடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணி வலுவாகத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு ஒருங்கிணைந்த உழைப்பின் மூலம் வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க வலுவான வெற்றியைப் பெற அனைவரும் செயல்பட வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க