செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் சிறாா் திரைப்பட போட்டிகள்

post image

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கான சிறாா் திரைப்பட போட்டிகள் பிப்.7 முதல் நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) நவம்பா், டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சிறாா் திரைப்படங்கள் மாணவா்களுக்கு ஒளிபரப்பப்பட்டன.

இதையடுத்து சிறாா் திரைப்படம் சாா்ந்த போட்டிகள் பள்ளி, வட்டார, மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளன. கதை, வசனம் எழுதுதல், நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். அதன்படி, பள்ளி அளவில் பிப். 7-ஆம் தேதியும், வட்டார அளவில் பிப்.13-ஆம் தேதியும், மாவட்ட அளவில் பிப்.20-ஆம் தேதியும் போட்டிகள் நடத்தப்படும்.

பள்ளி அளவிலான போட்டிகளில் அனைத்து மாணவா்களும் பங்குபெறும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகள்: இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும்போது அனுபவம் வாய்ந்த நடுவா்களை கொண்டு போட்டிகளை நடத்த வேண்டும். இதுதவிர போட்டிகள் குறித்த விவரங்களை முந்தைய தினத்தன்று மட்டுமே மாணவா்களுக்கு தெரிவித்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே தெரிவிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றை பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிர... மேலும் பார்க்க

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர... மேலும் பார்க்க

ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று(வெள்ளிக்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் ஏவிஎ... மேலும் பார்க்க