TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!
Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47' குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்
சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47' படம் உருவாகி வருகிறது.
சூர்யாவுடன் ஜித்து மாதவன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்காக இருக்குமோ அல்லது இருமொழிப் படமாக இருக்குமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
அதாவது, “ 'சூர்யா 47' ஒரு பக்கா தமிழ் திரைப்படம். இந்தப் படம் எந்தவொரு மலையாளப் படத்தின் தழுவலும் அல்ல.
நேரடியாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பின்னணியைக் கொண்ட ஒரு பிரத்யேகமான கதைக்களமாகத் தான் இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து 'ஆவேசம்-2' குறித்து பேசிய அவர், " தற்போது முழுக் கவனமும் ‘சூர்யா 47’ படத்தின் மீது மட்டுமே இருக்கிறது. இதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தி வருகிறேன்.
‘ஆவேசம் 2’ குறித்த ஆரம்பக்கட்ட யோசனைகள் இருந்தாலும், அது இப்போதைக்குத் தொடங்கும் நிலையில் இல்லை.

சூர்யாவின் படப்பிடிப்பிற்குப் பிறகுதான் அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்கப் போகிறேன்" என்று கூறியிருக்கிறார்.



















