செய்திகள் :

TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!

post image

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர்.

செயல்வீரர்கள் கூட்டம்
செயல்வீரர்கள் கூட்டம்

ஆதவ் அர்ஜூன் பேசுகையில், 'பிகில் படத்தில் 'நம்ம ஆளுங்களை எல்லாம் அடிச்சிட்டாங்க' என ட்ரைவர் சொல்ல 'உடனே அந்த இடத்துக்கு வண்டியை விடு'னு தலைவர் சொல்வார். 'தொக்கா மாட்னானுக' என தலைவர் வசனம் பேசிவிட்டு கார் கதவை திறக்கையிலேயே 5 பேர் பறப்பார்கள்.

துறைமுகம் தொகுதியில் அமைதியாக பிரசாரம் செய்த எங்கள் நிர்வாகிகள் மீது கை வைத்ததால்தான் தலைவர் முதலில் வட சென்னையில் களமிறங்குகிறார்.

சென்னை எங்களின் கோட்டை என்கிறார்களே அதனால்தான் முதலில் சென்னைக்குள் இறங்குகிறோம். இனி சென்னைன்னா தவெகதான்.

வடசென்னையில் சேகர் பாபு என்றால் இங்கே அவரின் காட்பாதர் வி.எஸ்.பாபு இருக்கிறார்.

செயல் வீரர்கள் கூட்டம்
செயல்வீரர்கள் கூட்டம்

வடசென்னை மக்கள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தை திமுக உருவாக்கிவிட்டது. இங்கே இருக்கும் அத்தனை மக்களும் உழைப்பாளிகள். இங்கே எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை.

திமுகவுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்யவே வேண்டாம். திமுக பற்றி வைகோ பேசியவற்றை எடுத்து போட்டாலே போதும்.

தீயசக்தி திமுகவை வீழ்த்த கேப்டன் உருவாக்கிய கட்சி தேமுதிக. தண்ணி போட்றவன் எல்லாம் கேப்டன் இல்லனு திமுக பேசுனாங்க. ஸ்டாலின் அதை கேட்டு சிரிச்சிட்டு இருந்தாரு. கேப்டனின் ஆன்மா ஒரு போதும் இவர்களை மதிக்காது.

எந்த இடத்துல அதிக வறுமை இருக்கிறதோ எந்த இடத்தில் மக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் போட்டியிட வேண்டுமென தலைவர் சொல்வார்.

தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பமாக இருக்கும்' என்றார்.

செயல் வீரர்கள் கூட்டம்
செயல் வீரர்கள் கூட்டம்

ஆனந்த் பேசுகையில், 'ஆதவ் முன்வைத்த தீர்மானத்தை நாங்கள் எல்லாரும் மனதார ஏற்றுக்கொள்கிறோம். உங்களுடைய விருப்பத்தை தளபதியிடம் சொல்வோம்.' என்றார்.

-

"குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும்" - சுரேஷ் கோபி

கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், "குருவாயூர் தேவசம்... மேலும் பார்க்க

"நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு"- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "திமுக கூட்டணியை மேலும் வலுப்ப... மேலும் பார்க்க

தள்ளிப்போகும் பேச்சுவார்த்தை; இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில் சுணக்கம்?

கடந்த 2-ம் தேதி, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிப்பை வெளியிட்டார்கள் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப்.இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டு, வரும் ஏப்ரல்‌ மாதம் முதல் அமலுக்க... மேலும் பார்க்க

TVK : பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்!' - செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி செய்த நிர்வாகிகள்?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்க... மேலும் பார்க்க

“மக்கள் போற்றும் மகத்தான தலைவர் அவர்.!"- மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி

'ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர்' என பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா... மேலும் பார்க்க

SIR: சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவு; நாளை வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்!

கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந... மேலும் பார்க்க