செய்திகள் :

அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்கான பணத்தை எப்படித் திட்டமிட்டுச் சேர்க்கலாம்?

post image

அரசு வேலை என்றாலே கவலை இல்லாத வேலை என்றுதான் நினைத்தது ஒரு காலம். காரணம், நிலையான வேலை, கை நிறைய சம்பளம் என்பது போக, ஆயுள் முழுக்க பென்ஷனும் கிடைக்கும் என்கிற காரணங்களால் அனைவரும் அரசு வேலை வேண்டும் என்று தேடித் தேடி சேர்ந்து வந்தனர்.

ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர பென்ஷன் கிடைப்பதில்லை. நியூ பென்ஷன் என்று சொல்லப்படும் என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து நாம் சேர்த்து வைக்கும் பணத்தில் இருந்துதான் நமக்கான ஓய்வூதியத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த நிலையில், என்.பி.எஸ் மூலம் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் ஓய்வு ஊதியம் என்பது தற்போது குறைந்த அளவிலேயே இருக்கிறது. அப்படியானால், உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை அதிக அளவில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

அரசு ஊழியர்கள் என்.பி.எஸ் மூலம் சேர்க்கும் பணம் குறைவாக இருந்தாலும், அவர்கள் ஓய்வு பெறும்போது கணிசமான பணம் கிடைக்கவே செய்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் இன்றைக்கு முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.

அரசு ஊழியர்கள் - ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்கள் ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் பணத்தைப் பெரும்பாலும் வங்கி எஃப்.டி.யில் போட்டு வைக்கிறார்கள். காரணம், வங்கி என்பது அவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. ஆனால், வங்கி அல்லது தபால் அலுவலகம்  எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி வருமானமானது அதிகபட்சம் 8.50% என்கிற அளவில்தான் இருக்கிறது. இந்தப் பணத்துக்குக் கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்டியது போக மீதம் கிடைக்கும் பணத்தைக் கணக்குப் போட்டு பார்த்தால், அது பணவீக்கம் என்கிற அளவில்தான் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், வங்கி அல்லது தபால் அலுவலக எஃப்.டி மூலம் கிடைக்கும் லாபம் நீண்ட கால நோக்கில் பெருகுவதும் இல்லை; குறைவதும் இல்லை. இது நீண்ட கால நோக்கில் சரியல்ல.

அரசு ஊழியர்கள் ஓய்வுக் காலத்துக்கான நிதித் திட்டமிடலை எப்படி செய்வது, ஓய்வுக் காலத்தில் கிடைக்கும் பணத்தை எங்கே, எப்படி முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பது, சிஸ்டமேட்டிக் வித்ராயல் பிளான் (SWP) என்றால் என்ன, அதை எப்படி செய்வது என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆன்லைன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ரீஜினல் ஹெட் மில்லட் பாபின் இந்த மீட்டிங்கில் அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்கும் வழிகள் பற்றிப் பேச இருக்கிறார்.

Tauras

இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் எனில், இந்த லிங்க்கினை சொடுக்கி https://labham.money/webinar-nov-26-2025? tm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov26_2025 உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையான லிங்க் அனுப்பப்படும்.

உங்கள் கவனத்துக்கு: ‘லாபம்’ என்பது ரெகுலர் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் நிறுவனம் ஆகும். எனவே, டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்!

ஆனால், ரெகுலர் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொண்டு, நல்ல லாபம் தரும் முதலீட்டு ஆலோசனைகளைப் பெறலாமே…!

இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A

தங்கம் போல, வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. அதே மாதிரி, இனி வெள்ளியையும் அடமானம் வைக்கலாம். இதற்கான புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. எங்கெல்லாம் இந்தக் கடன் கிடைக்கும்?இ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: 'Asset Allocation சூப்பர் ஃபார்முலா' நிகழ்ச்சி; சோம. வள்ளியப்பன் சிறப்புரை; முழு விவரம்

சொத்து ஒதுக்கீடு: சிறந்த முதலீட்டு உத்தி..!சொத்து ஒதுக்கீடு (Asset allocation) என்பது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியாகும், இது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் லிக்விட் ஃபண்ட் போன்ற பல்வேறு சொ... மேலும் பார்க்க

Asset Allocation: 'செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா' - கல்பாக்கத்தில் இலவச சிறப்பு நிகழ்ச்சி

சொத்து ஒதுக்கீடு: சிறந்த முதலீட்டு உத்தி..!சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியாகும், இது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் லிக்விட் ஃபண்ட் போன்ற பல்வேறு சொ... மேலும் பார்க்க

2026-ல் உங்கள் நிதிப் பழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்? - சோம.வள்ளியப்பன் தரும் சூப்பர் டிப்ஸ்!

அடுத்த சில வாரங்களில் 2025 காலண்டர் ஆண்டு முடிவுக்கு வரப் போகிறது. புதிய காலண்டர் ஆண்டு 2026-ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டில் நாம் கடைப்பிடித்து வந்த சில பழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் 20... மேலும் பார்க்க

சென்னையில் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு; விடுமுறையில் தாயகம் வந்துள்ள NRI-களுக்கு நல்ல வாய்ப்பு!

வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை நிறைவேற்ற ஒருவருக்கு சம்பளம் மற்றும் தொழில் வருமானம் மட்டும் போதாது. அவர் விலைவாசி உயர்வை விட அதிகமாக வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வருவது அ... மேலும் பார்க்க

Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund

'Emergency Fund-ஆ அப்படின்னா என்ன'ன்னு கேட்கும் நிலைமையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். ஏனெனில், அது பற்றிய புரிதலும், அதன் முக்கியத்துவமும் பலருக்கும் தெரிவதில்லை. இப்படித்தான் ரமேஷின் நண்பர் சுரே... மேலும் பார்க்க