செய்திகள் :

அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்கான பணத்தை எப்படித் திட்டமிட்டுச் சேர்க்கலாம்?

post image

அரசு வேலை என்றாலே கவலை இல்லாத வேலை என்றுதான் நினைத்தது ஒரு காலம். காரணம், நிலையான வேலை, கை நிறைய சம்பளம் என்பது போக, ஆயுள் முழுக்க பென்ஷனும் கிடைக்கும் என்கிற காரணங்களால் அனைவரும் அரசு வேலை வேண்டும் என்று தேடித் தேடி சேர்ந்து வந்தனர்.

ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர பென்ஷன் கிடைப்பதில்லை. நியூ பென்ஷன் என்று சொல்லப்படும் என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து நாம் சேர்த்து வைக்கும் பணத்தில் இருந்துதான் நமக்கான ஓய்வூதியத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த நிலையில், என்.பி.எஸ் மூலம் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் ஓய்வு ஊதியம் என்பது தற்போது குறைந்த அளவிலேயே இருக்கிறது. அப்படியானால், உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை அதிக அளவில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

அரசு ஊழியர்கள் என்.பி.எஸ் மூலம் சேர்க்கும் பணம் குறைவாக இருந்தாலும், அவர்கள் ஓய்வு பெறும்போது கணிசமான பணம் கிடைக்கவே செய்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் இன்றைக்கு முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.

அரசு ஊழியர்கள் - ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்கள் ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் பணத்தைப் பெரும்பாலும் வங்கி எஃப்.டி.யில் போட்டு வைக்கிறார்கள். காரணம், வங்கி என்பது அவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. ஆனால், வங்கி அல்லது தபால் அலுவலகம்  எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி வருமானமானது அதிகபட்சம் 8.50% என்கிற அளவில்தான் இருக்கிறது. இந்தப் பணத்துக்குக் கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்டியது போக மீதம் கிடைக்கும் பணத்தைக் கணக்குப் போட்டு பார்த்தால், அது பணவீக்கம் என்கிற அளவில்தான் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், வங்கி அல்லது தபால் அலுவலக எஃப்.டி மூலம் கிடைக்கும் லாபம் நீண்ட கால நோக்கில் பெருகுவதும் இல்லை; குறைவதும் இல்லை. இது நீண்ட கால நோக்கில் சரியல்ல.

அரசு ஊழியர்கள் ஓய்வுக் காலத்துக்கான நிதித் திட்டமிடலை எப்படி செய்வது, ஓய்வுக் காலத்தில் கிடைக்கும் பணத்தை எங்கே, எப்படி முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பது, சிஸ்டமேட்டிக் வித்ராயல் பிளான் (SWP) என்றால் என்ன, அதை எப்படி செய்வது என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆன்லைன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ரீஜினல் ஹெட் மில்லட் பாபின் இந்த மீட்டிங்கில் அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்கும் வழிகள் பற்றிப் பேச இருக்கிறார்.

Tauras

இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் எனில், இந்த லிங்க்கினை சொடுக்கி https://labham.money/webinar-nov-26-2025? tm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov26_2025 உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையான லிங்க் அனுப்பப்படும்.

உங்கள் கவனத்துக்கு: ‘லாபம்’ என்பது ரெகுலர் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் நிறுவனம் ஆகும். எனவே, டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்!

ஆனால், ரெகுலர் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொண்டு, நல்ல லாபம் தரும் முதலீட்டு ஆலோசனைகளைப் பெறலாமே…!

Personal Finance: 'செல்வம் சேர்க்கும் ஃபார்முலா' - சோம வள்ளியப்பன் உரை; இலவச நிகழ்ச்சி; முழு விவரம்

சொத்து ஒதுக்கீடு: நல்ல முதலீட்டு உத்தி..!முதலீட்டுத் தொகையைப் பல்வேறு சொத்து பிரிவுகளில் பிரித்து மேற்கொள்ளும், சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது ஒரு நல்ல முதலீட்டு உத்தியாகும்,நிறுவனப் பங்கு... மேலும் பார்க்க

ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்

சாப்பாட்டில் எவ்வளவு உப்பு போட வேண்டும்... என்ன படிக்கலாம்... எங்கே டிரிப் போகலாம்... இந்த டிரெஸ்ஸிற்கு என்ன மேட்சாக போடலாம்... - இப்படி சின்ன, பெரிய சந்தேகங்கள் அனைத்திற்கும், இப்போது 'ChatGPT' தான் ... மேலும் பார்க்க

ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது?

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் பங்குச்சந்தையும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த நேரத்தில் எதில் முதலீடு செய்வது நல்லது என்கிற கேள்வியும், சந்தேகமும் எழலாம். அந்தக் கேள்விக்கா... மேலும் பார்க்க

வளைகுடா வாழ்க்கை முடிவதற்குள், உங்கள் 'இரண்டாவது சம்பளத்தை' உறுதி செய்துவிடுவீர்களா?| NRI Special

துபாய் வெயிலோ, சவுதி பாலைவனமோ... கடந்த 10-20 வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து, பண்டிகைகளைத் தியாகம் செய்து உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள். "இன்னும் 5 வருஷம்... அப்புறம் செட்டில் ஆகிடலாம்" என்று உங்களுக... மேலும் பார்க்க

FD-ஐ விட இரட்டிப்பு லாபம்; 45-60 வயதில் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வது எப்படி? முழு விளக்கம்

"குழந்தைகள் படிப்பு முடிந்துவிட்டது அல்லது முடியப்போகிறது. வீட்டுக் கடன் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கையில் சில லட்சங்கள் சேமிப்பு இருக்கிறது. இனி என்ன செய்வது?" உங்களில் பலர் இப்படி யோசித்துக் கொண்டி... மேலும் பார்க்க

'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் 'ஃபார்முக்கு' வந்துள்ளது என்றே கூறலாம். தீபாவளிக்குப் பிறகு, தங்கம், வெள்ளி விலை சற்று இறங்குமுகத்திற்கு சென்றது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இந... மேலும் பார்க்க