செய்திகள் :

கோவை: ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் - விசாரணைக்கு உத்தரவு!

post image

கோவை வடவள்ளி 36-வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனை திமுக கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் ஆக்கிரமித்து வீடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

திமுக நிர்வாகி

இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம்  தெரிவித்தனர்.

இந்தப் புகார் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த கட்டடம் கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பகுதியின் ஆரம்ப சுகாதார நிலையமாக பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டாலும் அங்கு போதிய இடவசதி இல்லை.

கோவை திமுக நிர்வாகி

இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.  இந்த கட்டடம் துணை சுகாதார நிலையமாகவே செயல்படுகிறது. 

அதில் ஒரு பகுதியை மட்டும்  செவிலியர்களுக்கான குடியிருப்பாக பயன்படுத்திக் கொண்டு, 2 அறைகளை துணை சுகாதார நிலையமாகவும், 2 அறைகளை கிளினிக்காகவும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 3 அறைகளை குடியிருப்புக்காகவும், ஒரு அறையை கிளினிக்காகவும் பயன்படுத்தியுள்ளனர்.

வீடு

இது தொடர்பாக செவிலியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

“டெல்லிக்கு அழைத்த சி.பி.ஐ... பனையூரில் முகாமிடும் விஜய்” - பின்னணி என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க-வை இணைக்க கடுமையான முயற்சிகள் நடப்பதாக ஒருபுறம் செய்திகள் வருகின்றன. மறுபுறம் டெல்லியில் சி.பி.ஐவிசாரணைக்கு விஜய் ஆஜராகுமாறு சம்மன் வந்துள்ளது. டெல்லி செல்ல வேண்டிய வ... மேலும் பார்க்க

`கிரிக்கெட்டின் லாஸ்ட் ஓவரில் சிக்ஸர் போல இந்த மாநாடுகள்' - திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை

சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து மாநாடு, நிர்வாகிகள் சந்திப்பு என தமிழ்நாட்டை வலம்வரத் தொடங்கிவிட்டனர். அதன் அடிப்படையில், தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு திருச்சி மா... மேலும் பார்க்க

அமெரிக்கா - ஈரான் போர் விவகாரம்: ``இதுதான் இந்தியாவின் நிலைபாடு" - அமைச்சர் ஜெய்சங்கர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்பந்தத்தில் தொடங்கி, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா கூறியது வரை அரசியலில... மேலும் பார்க்க

``ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜனநாயகம் - குறைக்கப்பட வேண்டிய சுமை அல்ல" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றில், `ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து எழுதியிருக்கிறார். அதன் உள்ளடக்கம்...``2019-ம் ஆண்டு இந்தோனேசியா ஒரே நாளில் அதிபர், ந... மேலும் பார்க்க