“டெல்லிக்கு அழைத்த சி.பி.ஐ... பனையூரில் முகாமிடும் விஜய்” - பின்னணி என்ன?
Karuppu: 'எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டைனு போடுறாங்க!' - 'கருப்பு' பட அப்டேட் தந்த ஆர்.ஜே. பாலாஜி
சூர்யா, த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் 'கருப்பு' படத்தின் ரிலீஸுக்காகத்தான் சூர்யா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ஆர்.ஜே.பாலாஜி எங்கு சென்றாலும், அவரை கருப்பு படத்தின் அப்டேட் தொடர்பான கேள்வியும் பின்தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
'கருப்பு' படத்தின் முதற்கட்டப் பணி, படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணி என இயக்குநர் ஆர்.ஜே.பி பிஸியாக இருந்ததனால் சமீப நாள்களாக கிரிக்கெட் வர்ணனையில் பெரிய அளவில் பங்கேற்கவில்லை.

பிறகு, டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் கமென்டரி பக்கம் வந்திருந்தார். நேற்றைய இறுதிப் போட்டியின் வர்ணனைப் பணிகளை முடித்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பியிருக்கிறார். தற்போது 'கருப்பு' திரைப்படம் தொடர்பாகப் பேசி ஒரு காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்.
ஆர். ஜே. பாலாஜி பேசுகையில், "உங்களுடைய அன்புக்கு ரொம்ப நன்றி. ரெண்டு வருஷம் கழிச்சு கிரிக்கெட் வர்ணனைனு இப்போதான் வெளில வர்றேன். மறுபடியும் இந்த வேலைக்கு வந்ததுக்குப் பிறகு அவ்வளவு லவ் கொடுத்திருக்கீங்க!
சமூக வலைதளங்களிலும், நேரிலும் வந்து பலரும் நேர்மறையான விஷயங்களைப் பேசுறாங்க. 'கருப்பு' படத்தோட வேலைகளை மறுபடியும் தொடங்குறோம். சூர்யா சார் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தோடு இருக்கீங்கனு எனக்குத் தெரியும். நீண்ட நாட்களாகக் காத்திருக்கீங்க.
நானும் ரெண்டு வருஷமா இந்தப் படத்துல வேலை பார்த்திட்டிருக்கேன். உங்களுடைய காத்திருப்பு வொர்த்தாக இருக்கும்.

இன்னும் நிறைய டைம் எடுத்துக்கிற ஐடியாவில் நான் இல்ல. இன்னும் 1 வாரம் அல்லது 10 நாட்களில் படம் ரிலீஸ் உள்ளிட்ட பல அப்டேட்களோடு உங்களை வந்து சந்திக்கப் போறோம்.
ஏப்ரல் 10 திரைப்படம் ரிலீஸ் கிடையாது. ரிலீஸ் தேதி மாதிரி, எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை, நான் தயாரிப்பாளரை பொளந்து அடிக்கிறதுனு நிறைய விஷயங்களை அவங்களாகவே பேசிட்டு இருக்காங்க" எனச் சிரித்தவர், "நீண்ட நாள் காத்திருப்பு உங்களுக்கு கோபத்தைக் கொடுத்திருக்கும்னு எனக்குப் புரியுது.
நான் முழுமையாக அதை மதிக்கிறேன். சீக்கிரமாகவே அப்டேடோடு உங்களை மீட் பண்றேன். உங்களுக்கு இந்தப் படம் கண்டிப்பா பிடிக்கும்." எனப் பேசியிருக்கிறார்.

















