செய்திகள் :

`அவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிறார்' - மதுவில் விஷம்; கணவனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி

post image

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரை சேர்ந்தவர் ஜிக்னேஷ். இவரது மனைவி பிரித்வி. ஜிக்னேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதாக பிரித்வி அவரின் உறவினர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜிக்னேஷ் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்ல முடிவு செய்தார். எனவே ஆஸ்திரேலியாவில் உள்ள ஜிக்னேஷ் தொடர்பு முகவரி மற்றும் போன் நம்பரை கொடுக்கும்படி கேட்டு வாங்கிச்சென்றார்.

ஆனால் அவரால் சரியான முகவரியை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து அந்த நபர் இது குறித்து ஜிக்னேஷ் சகோதரர் அசோக்கிடம் தெரிவித்தார். அசோக்கும் தனது சகோதரர் குறித்து பிரித்வியிடம் கேட்டார்.

ஆனால் அவர் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே தனது சகோதரரை காணவில்லை என்று கூறி அசோக் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜிக்னேஷை தேடி வந்த நிலையில் ஜிக்னேஷ் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் அவரை அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தியபோது அவரது அவரது காதலன் நிலேஷ் என்பவடன் சேர்ந்து ஜிக்னேஷை கொலை செய்து தொழிற்சாலை ஒன்றின் அடியில் அவரது உடலைப் புதைத்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அப்பெண் தெரிவித்த இடத்தை தோண்டி ஜிக்னேஷ் உடலை எடுத்து டி.என்.ஏ.பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ''பிரித்விக்கு ஜிக்னேஷை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நிலேஷுடன் தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் அத்தொடர்பை இருவரும் தொடர்ந்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்களது தொடர்புக்கு தடையாக இருக்கும் ஜிக்னேஷை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக ஜிக்னேஷ் அருந்தும் மதுவில் விஷம் கலந்து கொடுத்தனர். இதில் விக்னேஷ் இறந்தவுடன் அவரது உடலை எடுத்துச்சென்று தொழிற்சாலையில் புதைத்துவிட்டனர். அதன் பிறகு ஜிக்னேஷ் உறவினர்களிடம் அவர் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார் என்று கூறி பிரித்வி நம்பவைத்தார்'' என்றார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிரதிபா கூறுகையில்,' 'கொலை செய்யப்பட்ட ஜிக்னேஷ் மனைவியிடம் நடத்திய விசாரணையில், முழு விபரம் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ஜிஐடிசி பகுதியில் உள்ள 12 அடி ஆழ குழியில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்," என்று கூறினார்.

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க