செய்திகள் :

சாமியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கோயில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்கள் - வைரலாகும் வீடியோ!

post image

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாகக் கருதப்படும் நாக்பூரில் உள்ள ஷிட்லா தேவி கோயிலில் மர்ம் நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கோயில் பொறுப்பாளர் முதல் நாள் இரவு கோயிலை பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வந்தபோது கோயில் மெயின் கேட் திறந்து இருந்தது. அதோடு கோயில் கதவும் திறந்து இருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் கோயிலுக்குள் இரண்டு பேர் நுழைந்து திருடுவது பதிவாகி இருந்தது. கோயிலுக்குள் நுழைந்த இரண்டு பேரில் ஒருவர், மிகவும் பவ்யமாக தனது காதைப் பிடித்துக்கொண்டு சாமியிடம் மன்னிப்பு கேட்கிறார். உண்டியல் திருடுவதற்காக மன்னித்துவிடும்படி கேட்டுக்கொள்கிறார்.

மற்றொருவர் அங்கிருந்த உண்டியலை திறக்க முயற்சி செய்கிறார். முதலாம் நபர் சாமியிடம் மன்னிப்பு கேட்டு முடித்த பிறகு யாராவது வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டாவது நபர் உண்டியலை உடைத்த பிறகு அதில் இருந்த பணத்தை பேக் ஒன்றில் அள்ளிப்போட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து கோயில் பூசாரி ஜிதேந்திர பாண்டே கூறுகையில், "காலை 8 மணியளவில், கோயிலுக்கு வந்தபோது, ​​பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு, சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தோம், அடையாளம் தெரியாத இரண்டு நபர்களைப் பார்த்தோம். அதன் பிறகு, இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தோம். காவல் நிலைய அதிகாரிகளும் ஷீட்லா மாதா கோயிலுக்கு வந்து பார்வையிட்டனர். கடந்த ஓராண்டாக தொடர்ந்து திருட்டு நடந்து வருகிறது.

இது மூன்றாவது சம்பவம். இதற்கு முன், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாத போது, ​​இரு தெய்வங்கள் அணிந்திருந்த தங்கத்தாலி, தங்கம் உள்ளிட்டவை திருடப்பட்டன. இரண்டாவது சம்பவத்தின் போது, ​​உண்டியல் உடைக்கப்பட்டது, இம்முறையும், இரு கோயில்களின் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன" என்றார்.

மூதாட்டியைக் கொலைசெய்து உடலின் மீது சர்க்கரை தூவியது ஏன்? - சிக்கிய ஜோடியின் 'பகீர்' வாக்குமூலம்!

ஒரு கொலை... அதை மறைக்கத் தமிழ் சினிமா பாணியில் போடப்பட்ட திட்டம்... ஆனால், வெறும் 5 மணி நேரத்தில் அத்தனை ‘ஸ்கெட்சையும்’ காலி செய்து, கொலையாளிகளைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது காவல்... மேலும் பார்க்க

அரக்கோணம்: கார் ஷெட்டில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள்; சிக்கிய இருவர்; பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஜவ்வாது மலைத்தொடரில், இயற்கையாகவே மிக உயர்தரமான சந்தன மரங்கள் விளைகின்றன. இங்கிருந்து வெட்டப்படும் சந்தன மரங்களைச் சேகரிக்கவும், பாதுகாப்பாகப் பராமரிக்கவும் அரை ... மேலும் பார்க்க

`அவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிறார்' - மதுவில் விஷம்; கணவனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரை சேர்ந்தவர் ஜிக்னேஷ். இவரது மனைவி பிரித்வி. ஜிக்னேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதாக பிரித்வி அவரின் உறவினர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நிலையில... மேலும் பார்க்க

தூத்துக்குடி த.வெ.க நிர்வாகி மீது இளம்பெண் மிரட்டல் புகார் - போலீஸார் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த த.வெ.க.வைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், த.வெ.க. நிர்வாகிகள் 2 பேர் தன்னை... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம்; 24 வயது பெண் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம்; ஈரோட்டில் அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான வினோதினி. திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரைத் திருமணம் செய்து ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த நவநீதக... மேலும் பார்க்க

சிறுமியின் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி பாலியல் வன்கொடுமை; ஈரோட்டில் அதிர்ச்சிச் சம்பவம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 10 - வகுப்பு தேர்வை எழுதி முடித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், பகல் பொ... மேலும் பார்க்க