செய்திகள் :

"அப்போ Active-ஆ இருந்திருந்தா இப்போ Inactive Modeக்கு தள்ளியிருக்க மாட்டாங்க"- திமுகவைச் சாடும் தவெக

post image

மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பான விவகாரம் இரு மாநிலங்களுக்கு நடுவில் பூதாகரமாக உருவாகிவருகிறது. அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கர்நாடாக அனுமதி கேட்கத் தேவையில்லை என்ற மத்திய அமைச்சரின் பதிலும், விவசாயிகளின் கோரிக்கையும் இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கிறது.

இதற்கிடையில், காவிரி நீர் வரத்தின்றி டெல்டா விவசாயிகள் கடும் சோகத்தில் இருக்கின்றனர். அதே நேரம், தற்போது இருக்கும் தவெக அரசு சரியாகச் செயல்படாததே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், தவெக தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ``மேகதாது அணை விவகாரம், 2026 மே 10-ம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்கு திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே? தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.

ஆட்சியிலிருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே. யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர்.

தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது. மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது"

"யார் குரலையும் கேட்காமல் indifferent, inactive ஆக இந்த அரசு இருப்பது நல்லதல்ல" - ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்... மேலும் பார்க்க

``வாக்காளர் அட்டை, ஆதார், பான் கார்டெல்லாம் குடியுரிமைக்கான சான்று அல்ல"- கல்கத்தா உயர் நீதிமன்றம்

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகள் ஆகியவை இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான சான்றுகள் அல்ல என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் தீ... மேலும் பார்க்க

"நாங்கள் இருப்பதே வாடகை வீடு; என் குடும்பத்தில் யாரிடமும் ரூ.2 கோடி இல்லை..!"- அமைச்சர் ரமேஷ்

கடந்த ஜூலை 25ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது கிழக்கு கோபுரத்தில் ஷூ அணிந்தபடி அவர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சை... மேலும் பார்க்க

திருச்சி: 'குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கக் கூடாது!' - கோரிக்கை முன்வைக்கும் சமூக ஆர்வலர்கள்

தமிழ்நாட்டில் குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்க முன்மொழியப்பட்ட திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, எக்ஸ்னோரா, மக்கள் சக்தி இயக்கம், தண்ண... மேலும் பார்க்க

`முதல்வர் எங்களை கடிந்துகொண்டாலும் தவறில்லை.. அமைச்சர்களுக்கு அவர்தானே லீடர்!' - அமைச்சர் வன்னிஅரசு

நெல்லையில் ஆணவப் படுகொலைக்குப் பலியான கவினின் முதல் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு, 'ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்படும்' என உறுதிபட கூறியிருக்கிறார... மேலும் பார்க்க

பரமத்திவேலுார் அரசு மருத்துவமனை: ரூ. 6 கோடி மதிப்புள்ள கட்டடம் எப்போது திறக்கப்படும்?- மக்கள் கேள்வி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பாலப்பட்டி, நன்செய் இடையார், பரமத்திவேலுார், பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வ... மேலும் பார்க்க