செய்திகள் :

"அவர் நிஜமான 'ஜனநாயக'னாக வர வேண்டும் என மக்கள் விரும்பினார்கள்!" - 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் கே.வி.என்

post image

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்தான்.

ஆனால், இந்த ரீமேக்கில் சில புதிய விஷயங்களையும் ஹெச்.வினோத் சேர்த்திருக்கிறார்.

இப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா படம் பற்றிய தகவல்களை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Jana Nayagan - Vijay
Jana Nayagan - Vijay

அந்தப் பேட்டியில், "விஜய் சார் இப்போது முதல்வராகிவிட்டார். 'ஜனநாயகன்' என்ற தலைப்பை வைக்கும்போது, இதெல்லாம் நடக்கும் என உங்களுக்குத் தோன்றியதா?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கே. வி. என். வெங்கட நாராயணா, "(சிரித்துக்கொண்டே) மேடம், நீங்கள் அப்படிப் பார்த்தால் பல விஷயங்கள் தற்செயலாக நடந்தது போலத்தான் இருக்கும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், எங்கள் யாருக்கும் அப்படித் தோன்றவில்லை.

ஆனால், இப்போது பின்நோக்கிப் பார்த்து எல்லாப் புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தால், உண்மையிலேயே அப்படித்தான் தோன்றுகிறது. பூஜை விழாவின்போது கூட நான் பேசும்போது, 'இது விஜய் சாரின் கடைசிப் படம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் நாம் #OneLastTime என்ற ஹேஷ்டேக்குடன் விஜய் சாருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்குவோம்' என்று பேசினேன்.

அப்படிப் பேசும்போது இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரியாது. ஆனால், மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து நாங்கள் அனைவரும் மிகவும் நேர்மறையாகவே உணர்ந்தோம்.

அதைவிட முக்கியமான ஒன்று, 'ஜனநாயகன்' என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே நாங்கள் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தோம். அதில் 'Torch Bearer of Democracy' என்று போட்டிருந்தோம்.

அதற்குப் பிறகுதான் 'ஜனநாயகன்' என்ற தலைப்பே வெளியானது. இப்போது வரிசையாகப் பார்த்தால் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு ஒரு கதை போல இருக்கிறது.

மக்கள் அனைவருமே அவர் ஒரு நிஜமான 'ஜனநாயகனாக' வரவேண்டும் என்று விரும்பினார்கள். அது வெறும் படத்தோடு நின்றுவிடாமல் நிஜத்திலும் நடந்துவிட்டது!" எனப் பகிர்ந்திருக்கிறார்.

``போராடுபவர்களுக்கு லத்திகளும் மௌனமுமே பதிலாய்க் கிடைத்தன" - நடிகை அபிராமி ஆதங்கம்!

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

"நான் வேலையில்லாமல் வீட்டுல இருக்கேன்; எனக்கு வேலை கொடுங்க" - வடிவுக்கரசி ஆதங்கம்

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படத்தின் 25-வது நாள் விழா இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்பேசிய நடிகை வடிவுக்கரசி, "இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும... மேலும் பார்க்க

National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ளூ' இயக்குநர் பேட்டி

2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் 'ப்ளூ' என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத... மேலும் பார்க்க

Kajal Aggarwal: ``தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" - நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பை... மேலும் பார்க்க

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க

ஜன நாயகன்: "அதை எதிர்த்து சண்டைப்போடுவதற்கான நேரம் எங்களிடம் இல்லை" - தடைகள் குறித்து அ. வினோத்

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க