செய்திகள் :

"ஆச்சரியக்குறி, தற்குறி... எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல"- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி

post image

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

``ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.

எங்களுடைய குறி தேர்தல் குறிதான். விஜய் தனது தரத்தைக் குறைத்துக்கொள்வது அவரது விருப்பம்.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் விஜய்

அதற்கு நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது.

களத்தில் இருக்கும் எல்லோரும் எங்கள் எதிரிகள் தான். எதிரிகள் என்றால் அவர்கள் எல்லோரும் வெறும் அரசியல் எதிரிகள் மட்டும் தான்.

தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடும் எந்தப் பகைமையும் கிடையாது. அரசியலிலே தமிழ்நாட்டு மக்களை வாழவைக்கமுடியும் என்று சொன்னால் அது திராவிட ஆட்சியால் மட்டும்தான் முடியும்.

அதனை இந்த 5 ஆண்டுகளிலே நிரூபித்தும் காட்டி இருக்கிறோம். நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

செய்வதைத் தான் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. எந்த ஏமாற்று வேலைகளும் தமிழக மக்கள் மத்தியில் எடுப்படாது" என்று பேசியிருக்கிறார்.

"திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோயிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்... மேலும் பார்க்க

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க