செய்திகள் :

"ஆட்சியில் பங்கு என விஜய் ஆஃபர் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார்" - திருமாவளவன்

post image

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவெக கட்சி கூட்டணிக்காக அனைத்து கதவுகளையும் திறந்து வைத்திருக்கிறது.

தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல, ஆட்சியில் பங்கு தருகிறோம் என ஆஃபர் கொடுக்கிறது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இதுதான் தற்போது நடிகர் விஜய் தலைமையிலான கட்சியின் நிலைமை. விஜய் பெரும் மக்கள் செல்வாக்கு உள்ள நடிகர், அவர் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நம்பக்கூடியவர்.

ஆனால் அவர் சட்டமன்றத் தேர்தலுக்காக ஆஃபர் போட்டுக் காத்திருக்கிறார். அங்கேயும் இன்னும் ஒரு கூட்டணி அமையவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

அதேபோல ஏற்கெனவே கூட்டணியில் இருந்த பாமக தற்போது மீண்டும் இணைந்ததைக் காட்டி மார்தட்டிக் கொள்கிறது அதிமுக.

புதிதாக வேறு எந்த ஒரு கட்சியும் அங்கு சேரவில்லை. பாமக-விலேயே இன்னும் உட்கட்சி மோதல் தீர்ந்தபாடில்லை.

ஆனால், பாமக எங்கள் அணிக்கு வந்துவிட்டது என்கிறது அதிமுக. அதிமுக - பாஜக தலைமையில் கூட்டணி அமைவதற்கே திண்டாட்டமான நிலை.

ஆனால் ஊடகங்கள் இதையெல்லாம் மறைத்து திமுக கூட்டணி பலவீனமாக உள்ளதுபோல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

திருமாவளவன் - ஸ்டாலின்
திருமாவளவன் - ஸ்டாலின்

அதுவும் சங் பரிவார்களின் செயல் திட்டம்தான். தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று பேசியிருக்கிறார்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க