செய்திகள் :

ஆட்சி மாறியும் அரசின் கடன் தொடர்கிறது? - தவெக அரசின் ரூ.1.73 லட்சம் கோடி கடன் திட்டம்!

post image

2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசு புதிய கடனாக ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி பெறத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ரூ.51 ஆயிரத்து 971 கோடி மதிப்பிலான பழைய கடன்களை திருப்பிச் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையின்படி, மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மேம்பட்ட வரி நிர்வாகம், வரி வசூல் திறன் உயர்த்துதல் மற்றும் வருவாய் பெருக்க நடவடிக்கைகள் காரணமாக, வருவாய் பற்றாக்குறை படிப்படியாகக் குறையும் என அரசு தெரிவித்துள்ளது.

2026-2027ஆம் ஆண்டில் ரூ.55 ஆயிரத்து 775 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை, 2027-2028ஆம் ஆண்டில் ரூ.53 ஆயிரத்து 993 கோடியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் நிதி ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப் பற்றாக்குறையின் விகிதம் 2028-2029ஆம் ஆண்டில் 2.80 சதவீதமாக குறையும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

பொதுக்கடன் நிலவரத்தைப் பொறுத்தவரையில், புதிய கடன் பெறும் திட்டம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், 2027 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு அரசின் மொத்த நிலுவைக் கடன் ரூ.10 லட்சத்து 98 ஆயிரத்து 768 கோடியாக இருக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள இந்த கணிப்புகள், ஒருபுறம் மாநிலத்தின் கடன் சுமை தொடர்ந்து உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டினாலும், மறுபுறம் வருவாய் பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு விளக்கியுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

* புதிய கடன்: ரூ.1,73,445 கோடி

* கடன் திருப்பிச் செலுத்த திட்டம்: ரூ.51,971 கோடி

* 2027-28ல் வருவாய் பற்றாக்குறை: ரூ.53,993 கோடி

* 2028-29ல் நிதிப் பற்றாக்குறை: GSDP-யில் 2.80%

* 2027 மார்ச் 31 நிலவரப்படி மொத்த அரசு கடன்: ரூ.10,98,768 கோடி

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க