செய்திகள் :

`இது முட்டாள்தனமானது' Vs `சமநிலையைப் பேண முடியும்' - TRB ராஜா - கீர்த்தனா கருத்து மோதல்!

post image

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ``எங்கள் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே. டயர் நிறுவனம் இரவோடு இரவாக டயர்களை எரிப்பதால் கடும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஆட்சியிலிருந்தே இந்த புகார் நீடித்து வருவதால், மக்களின் நலன் கருதி அந்த தொழிற்சாலையை உடனடியாக இழுத்து மூட வேண்டும். இத்தகைய கம்பெனி நமக்குத் தேவையில்லை." எனக் காரசாரமாக வலியுறுத்தினார்.

எம்.எல்.ஏ தாஹிரா
எம்.எல்.ஏ தாஹிரா

எம்.எல்.ஏ தாஹிராவின் இந்த பேச்சுக்கு முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். அவர் எக்ஸ் பதிவில், ``மாசுபாடு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஒரு தொழிற்சாலையை ஒட்டுமொத்தமாக மூடச் சொல்வது முட்டாள்தனமானது. இது தொழில்துறைக்கு மிகவும் தவறான சமிக்ஞையை அனுப்பும். இதுபோன்ற முதிர்ச்சியற்ற மற்றும் சிந்தனையற்ற பேச்சுகளால் தமிழ்நாட்டின் தொழில் துறை நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, `` `அரசியலை தொழில்துறையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்' என்ற கருத்து, உண்மைகள் சாதகமாக இல்லாதபோது சிலருக்கு பேசுவதற்கு வசதியாக இருக்கிறது. அதே வழியைப் பயன்படுத்தித் தங்களுக்குச் சாதகமானக் கருத்துகளைப் பரப்புவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

நல்லாட்சிக்கு நுட்பமான அணுகுமுறை தேவை. நாங்கள் எதையும் ‘சரி - தவறு’ என்ற ஒற்றைப் பார்வையில் அணுகுவதில்லை. வேலைவாய்ப்புகளையும் சுற்றுச்சூழலையும் எங்களால் ஒரே நேரத்தில் சமநிலையாகப் பாதுகாக்க முடியும்.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

தொழிற்சாலைகளை மூடுவது தொழிலாளர்களைப் பாதிக்கும். அதேபோலக் கட்டுப்பாடற்ற மாசடைவு அங்குள்ள மக்களைப் பாதிக்கும். நமது முதலமைச்சரின் தலைமையில், நாங்கள் தொழில்துறை வளர்ச்சியையும் அதேவேளையில் சுற்றுச்சூழல் விதிகளையும் சரியாகப் பின்பற்றிச் செயல்பட உறுதியேற்றுள்ளோம்.

நிலையான வளர்ச்சி என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல. அது நமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நான் சட்டமன்றத்திலேயே தெரிவித்திருந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"கட்டுமானச் செலவே ரூ.4 கோடி தான்; முதல்வரின் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி செலவு!" - நயினார் தாக்கு

திருச்சியில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கடந்த ஜூன் 12ந-ம் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூ... மேலும் பார்க்க

`பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிகள்; தீண்டாமை... உளவியல் ஒடுக்குமுறை!' - மாணிக்கம் தாகூர்

புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

மேகதாது: ``மேலும், மேலும் முன்னேறும் கர்நாடக அரசு... ஆனால், நாம்?" - அன்புமணி வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத்தை, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி நேரில் சந்தித்து வலியுறுத... மேலும் பார்க்க

விதி 110: ``நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்" - சீமான் காட்டம்

கடந்த ஆகஸ்ட் 05- ம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அத்துறை தொடர்பான அறிவிப்புகளும... மேலும் பார்க்க

TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி; அவையில் அனல் பறந்த விவாதம் | Full Story

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டன... மேலும் பார்க்க

ஈரான் பிரதமரைச் சந்தித்த மோடி: `ஈரானுக்கு உதவினால் பொருளாதார தடை' - அமெரிக்கா எச்சரிக்கை

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகருக்கு 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்காகச் சென்றிருந்தார்.மோடி - ஈரான் பிரதமர் சந்திப்புஅங்கே ரஷ்ய அத... மேலும் பார்க்க