செய்திகள் :

இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து 87.46 ரூபாயாக முடிவு!

post image

மும்பை: உலகளாவிய வர்த்தகப் போர் கவலைகள் முதலீட்டாளர்களிடையே வெறுப்பைத் தூண்டியதால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிந்தது.

உலகளாவிய வர்த்தகப் போரில் இந்திய ரூபாய் எதிர்மறையான சார்புடன் வர்த்தகம் ஆவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 10 சதவிகித வரி விதித்து டிரம்ப் தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்று சீனா சில அமெரிக்க தயாரிப்புகள் மீது வரிவிதிப்புகளை அறிவித்ததன் மூலமாகவும், கூகுள் மீது ஒரு நம்பிக்கையற்ற விசாரணையை அறிவித்ததன் மூலமாகவும் பதிலடி கொடுத்தது வருகிறது.

இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் வெளிநாட்டு சந்தையில் அமெரிக்க நாணயத்தின் வலிமை ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் இன்று, இந்திய ரூபாய் ரூ.87.13 ஆக தொடங்கி, குறைந்தபட்சமாக ரூ.87.49 ஆக சரிந்த நிலையில், முடிவில் 39 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிவடைந்தது.

நேற்று இந்திய அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.87.07-ஆக முடிந்தது.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ் 312 புள்ளிகள் சரிவு!

பி.சி. ஜுவல்லர் நிறுவனத்தின் லாபம் ரூ.148 கோடியாக உயர்வு!

புதுதில்லி: பி.சி. ஜுவல்லர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.147.96 கோடி ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.197.98 கோடியாக இருந்த... மேலும் பார்க்க

திரிவேணி இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிகர லாபம் 69% சரிவு!

புதுதில்லி: சர்க்கரை தாயரிப்பு நிறுவனமான, திரிவேணி இன்ஜினியரிங் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டு (3வது காலாண்டு) 69 சதவிகிதம் சரிவடைந்து ரூ.42.57 கோடி ஆக குறைந்துள்ளது.கடந... மேலும் பார்க்க

வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!

புதுதில்லி: வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில், இரு மடங்கு அதிகரித்து ரூ.672.19 கோடி ஆக உயர்ந்துள்ளது.2023-24 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் அதன் நிக... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ் 312 புள்ளிகள் சரிவு!

மும்பை: வர்த்தக போர் கவலைகள் மற்றும் இந்த வார இறுதியில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவு ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தததால் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் ... மேலும் பார்க்க

தங்கத்தில் இப்போது முதலீடு சாத்தியமா?

விலையுயர்ந்த உலோகங்களில் ஒன்றான தங்கம், இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், இது தற்போது முக்கிய முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆபரணங்கள் வடிவில் மட்டும... மேலும் பார்க்க

ஈவுத்தொகையாக ரூ.35.3 கோடியை அறிவித்த தேசிய விதைகள் கழகம்!

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் 2023-24 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.35.30 கோடியை அறிவித்துள்ளது.வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான தேசிய வி... மேலும் பார்க்க