செய்திகள் :

"இனி என்னிடம் அரசியல் பேசாதீர்கள்; அன்புமணி.!" - அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ்

post image

2024-ம்‌ ஆண்டு டிசம்பர் மாதம் பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் தொடங்கியது ராமதாஸ், அன்புமணி மோதல்.

பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் முகுந்தன். அக்கா மகனுக்கு கட்சியில் உடனடியாக பெரிய பொறுப்பு வழங்கப்படுவதை ரசிக்கவில்லை பாமக தலைவர் அன்புமணி.

இந்தப் புகைச்சல் கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்தாலும், 2025-ம் ஆண்டு மே மாதம் வெட்ட வெளிச்சமானது. அப்போது தான், ராமதாஸ் தன்னை தானே பாமக தலைவராக அறிவித்தார். இது அன்புமணிக்கு பிடிக்கவில்லை.

இதையடுத்து ராமதாஸ் அணி, அன்புமணி அணி என வெளிப்படையாகத் தோன்றின.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அமைதியான ராமதாஸ்

இதன் பின், இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தின் படியேறுதல்... அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் என வேகமாக அடுத்தடுத்து அரங்கேறின.

ஆனால், எந்தப் பேச்சுவார்த்தையும் கைகொடுக்கவில்லை.

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பிற கட்சிகளும் அப்பா-மகனை இணைக்க செயல்பட்டன. ஆனால், எதுவும்‌ வேலைக்கு ஆகவில்லை.

இதனால், அன்புமணி அணி அதிமுக கூட்டணியிலும், ராமதாஸ் தரப்பு சசிகலா கூட்டணியிலும் தேர்தலைக் கண்டது.

இந்தத் தேர்தல் அன்புமணி தரப்பிற்கு 4 எம்.எல்.ஏக்களை தந்தாலும், ராமதாஸ் தரப்பிற்கு கிடைத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஜீரோ.

தேர்தலுக்குப் பின் அப்படியே அமைதியாகிவிட்டார் ராமதாஸ்.

மீண்டும் ராமதாஸ், அன்புமணி!

கடந்த மாதம் 24-ம் தேதி, பெற்றோர் திருமண நாளையொட்டி, தைலாபுரம் சென்றார் அன்புமணி.

விரிசல் உண்டானதில் இருந்து பல சந்திப்புகள் நடந்திருந்தாலும், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக இருந்தது. இந்தச்‌ சந்திப்பில் கண்ணீரோடு அன்புமணியை அணைத்து கொண்டார் ராமதாஸ்.

அன்றே அன்புமணி அணியும், ராமதாஸ் அணியும் மீண்டும் பாமக ஆகியது.

இன்று ராமதாஸிற்கு பிறந்த நாள். இன்று மிக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அறிவித்துள்ளார் ராமதாஸ்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அது...

"இன்று எனக்கு 88-வது வயது தொடங்குகிறது. இந்த நல்ல நாளில் ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இன்று முதல் எனக்கு 'அரசியல் துறவரம்'.

அரசியல் துறவரம் என்று சொன்னால், நான் இனி அரசியல் பேச Thursday, அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன்.

ஆனால் என்னைப் பார்க்க வருபவர்களைப் பார்ப்பேன், நலம் விசாரிப்பேன்; அவ்வளவுதான். அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். நாங்களும் அதற்குத் துணையாக இருப்போம்.

என்னை வந்து பார்ப்பவர்கள் 'ஐயா நலமா?' என்று மட்டும் கேட்டுவிட்டுச் செல்லலாம். அரசியலைப் பேசுவதற்கு இனி ஏதுமில்லை, ஏனென்றால் இன்று முதல் நான் ஒரு துறவியாகிவிட்டேன்".

'இனி சீர்திருத்தங்களை நோக்கி..!' - தர்மேந்திர பிரதான் ராஜினாமாவிற்கு சோனம் வாங்சுக் பதிவு

வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இந்திய செயற்பாட்டாளர் சோனம் வ... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதான் விலகல்: 'கரப்பான் பூச்சிகள் வென்றன; இன்னும் 2 கோரிக்கைகள் நிலுவை' - CJP Reactions

டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு கடித... மேலும் பார்க்க

CJP Protest: `நாம் சாதித்து விட்டோம்!' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அபிஜீத் திப்கே

மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வரவேற்று பேசியிருக்கிறார்.தர்மேந்திர பிரதான்இது குறித்து அவர... மேலும் பார்க்க

"த.வெ.க-விடம் காங்கிரஸுக்கு உரிய இடங்களைக் கேட்டு பெற்று போட்டியிடுவோம்!" - அமைச்சர் ராஜேஷ்குமார்

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற உற்சாகத்தில், கட்சிப் பணிகளில் வேகம் காட்டி வருகிறது சத்திய மூர்த்தி பவன். அண்மையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' ... மேலும் பார்க்க

விழுப்புரம்: சுட்டிக்காட்டிய விகடன்… சுத்தம் செய்யப்பட்ட திண்டிவனம் மேம்பாலம்! - ஆட்சியர் ஆக்‌ஷன்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேம்பாலத்தை, நகரின் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை பொதுப் போக்குவரத்துடன் இணைக்கும் பாலம... மேலும் பார்க்க

"எனக்கு டைபாய்டு காய்ச்சல்; தர்மேந்திர பிரதான் ராஜினாமா நிச்சயம் நடக்கும்" - அபிஜித் தீப்கே

டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி.காக்ரோச் ஜனதா கட்சியின்‌ நிறுவனர் அபிஜித் தீப்கே கடந்... மேலும் பார்க்க