செய்திகள் :

'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை' இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்

“இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிகரிக்கின்றன” என்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் ரொம்பப் பிரமாதமாகப் பேசியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.

அவர் பேசியதையெல்லாம் பார்க்கப் பார்க்கப் புல்லரிக்கத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், எரிச்சல்தான் எட்டிப் பார்க்கிறது. காரணம்... அவருடைய ஆட்சியின் கடந்தகால செயல்பாடுகள்தான்.

‘பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா’ என்று இயற்கை விவசாயத்துக்கென்றே 2015-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ‘ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இது, இப்போது, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’யாகி விட்டது.

2019 மத்திய பட்ஜெட்டில் வெளியான, ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்’ என்ற அறிவிப்பு, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே கிடக்கிறது.

‘வேஸ்ட் டீ கம்போஸர்’ என்ற இயற்கை உர வளர்ச்சியூக்கி, 20 ரூபாய்க்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை விவசாயிகளிடம் பெருவாரியாகக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அந்தத் தயாரிப்பு உரிமையே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது.

இப்படி முன்னெடுப்புகளெல்லாம் ஒருபக்கம் தூங்கிக் கொண்டிருக்க, ‘விவசாயிகளே இயற்கை விவசாயம் செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி. உண்மையிலேயே இயற்கை விவசாயத்தின் மீது 100% ஆர்வம் இருந்தால், அவர்தான் முதலில் களத்தில் குதிக்கவேண்டும், விவசாயிகள் அல்ல!

ஆம், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ‘வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ். சுவாமிநாதன், மூலமாக, ‘பசுமைப் புரட்சி’ என்கிற பெயரில் ரசாயன விவசாயத்தை 100% கட்டாயமாகப் புகுத்தியது, மத்திய அரசுதான். ரசாயன உரங்களை விவசாயிகள் ஏற்க மறுத்த நிலையில், வேளாண் அலுவலர்கள், இரவோடு இரவாக விவசாயிகளின் வயல்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ரசாயன உரங்களைக் கொட்டினார்கள். அந்த இடங்களில் மட்டும் பயிர்கள் வழக்கத்தைவிட செழிப்பாக வளர்ந்து நிற்பதைக் காட்டி, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பிடியில் சிக்க வைத்தனர். ஆக, அரசாங்கத்தின் கைகளில்தான் அத்தனையுமே இருக்கின்றன.

100% இயற்கை விவசாயம்... 100% சாத்தியமே. இதற்கு, இந்திய துணைக் கண்டத்திலேயே முன்னுதாரணமாக 100% இயற்கை விவசாயம் என்பதை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது, சிக்கிம் மாநிலம். கோவையில், பிரதமர் மோடி பேசியது 100% உண்மை என்றால், ‘இனி, இந்தியாவில் 100% இயற்கை விவசாயம்’ என்று உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை விவசாயம், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு, அதன் முன்னோடியான நம்மாழ்வார் மீதிருக்கும் மரியாதை, இதன் விளைவாக உருவாகியிருக்கும் எழுச்சி என எல்லாவற்றையும் ‘அறுவடை’ செய்வதற்காக நடத்தப்பட்ட ‘தேர்தல் நாடக’மாகவே இருக்கும்.

- ஆசிரியர்

``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் ... மேலும் பார்க்க

இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன?

2026-ம்‌ ஆண்டிற்கான உலக சமத்துவமின்மை அறிக்கை வெளியாகி உள்ளது.இது 2018, 2022 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக வரும் அறிக்கை இது ஆகும்.அதில் கூறப்பட்டுள்ளவை...இந்தியாவின் முதல் 1 சதவிகித பணக... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத்தொகை: "நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?" - அமைச்சர் KKSSR விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கத்தை வெள்ளியன்று மாலை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலை... மேலும் பார்க்க

``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மைய... மேலும் பார்க்க