செய்திகள் :

சென்னை: மகளுக்கு திருமணமாகாத விரக்தியில் தந்தை தற்கொலை; அடுத்த நொடியில் மகள் எடுத்த விபரீத முடிவு

post image

சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (57). ஆட்டோ டிரைவரான இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார்.

இளைய மகள் பாக்கியா (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதனால் கிருஷ்ணகுமார், கடும் மனவருத்தத்தில் இருந்தார். கடந்த 7 -ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணகுமார் பின்னர் வீடு திரும்பவில்லை. அதனால் அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் கிருஷ்ணகுமாரைத் தேடினர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

பாக்கியா
பாக்கியா

8-ம் தேதி கிருஷ்ணர் குமாரின் மனைவி வீட்டிற்குப் பின்னால் உள்ள கிணறு பகுதிக்குச் சென்றபோது அங்கு கணவரின் செல்போன் இருந்தது. உடனே மகளிடம் விவரத்தைக் கூறினார். பின்னர் கிணற்றை அவர்கள் எட்டிப்பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி சடலமாக மிதந்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் வடபழனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் வருவதற்குள் பாக்கியா அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார். திடீரென அம்மாவை ஒர் அறைக்குள் வைத்து பூட்டிய பாக்கியா, சமையலறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அறைக்குள் இருந்த படி கிருஷ்ணகுமாரின் மனைவி சத்தம் போட்டார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டனர். பாக்கியாவைத் தேடி பார்த்தபோது அவர் சமையலறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பாக்கியாவின் சடலத்தையும் வடபழனி போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் 30 வயதாகியும் மகளுக்குத் திருமணமாகாத விரக்தியில் கிருஷ்ணகுமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. அந்த மனவேதனையில் மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரிந்தது. அப்பா, மகள் என அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்லை: போதையில் தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் தாய் செய்த செயல்... விபரீதத்தில் முடிந்த சோகம்!

நெல்லையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தின் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி லதா. 56 வயதான அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி என்ற மகனும் உள்ளனர். மாயாண்டி மது போதைக்கு அடிமைய... மேலும் பார்க்க

சென்னை: மகனின் கண் முன்னால் தாய்க்கு பாலியல் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் கைது; என்ன நடந்தது?

சென்னை, கோயம்பேடு காவல் மாவட்டத்தில் 41 வயதான பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 08.03.2026-ம் தேதி மதுரவாயல் பகுதியிலுள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அந்தப் பெண் தன்னுடைய மகனு... மேலும் பார்க்க

நெல்லை: பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பிய இளைஞர்கள்; தந்தையுடன் பைக்கில் விரட்டிப் பிடித்த மாணவி!

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, அருகிலுள்ள கோவில்பத்துவில் உள்ள டியூசன் சென்டரில் மாலை நேரத்தில் டியூசன் படித்து இரவில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், வழக்கம... மேலும் பார்க்க

ஈரோடு: கொத்தடிமைகளாக இருந்த மத்தியப் பிரதேச சிறுவர், சிறுமியர்; மாவட்ட நிர்வாகம் மீட்ட பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள ஓலப்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சில தனியார் கரும்பு தோட்டங்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்... மேலும் பார்க்க

சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை - அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்க... மேலும் பார்க்க

தென்காசி: திருமணத்திற்கு மறுத்த காதலி; பள்ளியின் வாசலில் வைத்து கத்திரிக்கோலால் குத்திய காதலன் கைது

தென்காசியைச் சேர்ந்தவர் சொர்ணம். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்குடியில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளர... மேலும் பார்க்க