செய்திகள் :

சென்னை: மகனின் கண் முன்னால் தாய்க்கு பாலியல் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் கைது; என்ன நடந்தது?

post image

சென்னை, கோயம்பேடு காவல் மாவட்டத்தில் 41 வயதான பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 08.03.2026-ம் தேதி மதுரவாயல் பகுதியிலுள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அந்தப் பெண் தன்னுடைய மகனுடன் வந்திருந்தார்.

பின்னர் அந்தப் பெண்ணும் அவரின் மகனும் வீட்டுக்குச் செல்ல நடந்து வந்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவர், அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றார். மகன் முன்பு தனக்கு நடந்த கொடுமையால் அந்தப் பெண் மனதளவில் பாதிக்கப்பட்டார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கைது
கைது

அதன்பேரில் மதுரவாயல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜா பத்ரா (24) என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதனால் சுராஜா பத்ராவைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான சுராஜா பத்ரா, மதுரவாயல், சீமாத்தம்மன் காலனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை: போதையில் தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் தாய் செய்த செயல்... விபரீதத்தில் முடிந்த சோகம்!

நெல்லையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தின் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி லதா. 56 வயதான அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி என்ற மகனும் உள்ளனர். மாயாண்டி மது போதைக்கு அடிமைய... மேலும் பார்க்க

சென்னை: மகளுக்கு திருமணமாகாத விரக்தியில் தந்தை தற்கொலை; அடுத்த நொடியில் மகள் எடுத்த விபரீத முடிவு

சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (57). ஆட்டோ டிரைவரான இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் பாக்... மேலும் பார்க்க

நெல்லை: பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பிய இளைஞர்கள்; தந்தையுடன் பைக்கில் விரட்டிப் பிடித்த மாணவி!

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, அருகிலுள்ள கோவில்பத்துவில் உள்ள டியூசன் சென்டரில் மாலை நேரத்தில் டியூசன் படித்து இரவில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், வழக்கம... மேலும் பார்க்க

ஈரோடு: கொத்தடிமைகளாக இருந்த மத்தியப் பிரதேச சிறுவர், சிறுமியர்; மாவட்ட நிர்வாகம் மீட்ட பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள ஓலப்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சில தனியார் கரும்பு தோட்டங்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்... மேலும் பார்க்க

சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை - அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்க... மேலும் பார்க்க

தென்காசி: திருமணத்திற்கு மறுத்த காதலி; பள்ளியின் வாசலில் வைத்து கத்திரிக்கோலால் குத்திய காதலன் கைது

தென்காசியைச் சேர்ந்தவர் சொர்ணம். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்குடியில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளர... மேலும் பார்க்க