கேரளம்: "மற்றொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் கணவனைப் பார்த்தேன்" - அமைச்ச...
ஈரோடு: கொத்தடிமைகளாக இருந்த மத்தியப் பிரதேச சிறுவர், சிறுமியர்; மாவட்ட நிர்வாகம் மீட்ட பின்னணி என்ன?
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள ஓலப்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சில தனியார் கரும்பு தோட்டங்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்துள்ளன.

இதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த யுவராஜ் சிண்டோ என்ற நபர் 5 சிறுவர்கள், 4 சிறுமிகள் என மொத்தம் 24 நபர்களை அந்த மாநிலத்தில் இருந்து அழைத்து வந்து கரும்பு வெட்டும் பணிகளில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தி வந்ததைக் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர்.
அந்த நபரைக் கைது செய்ததுடன் சிறுமியர் உட்பட நபர்களையும் மீட்டு வாக்கு மூலம் பெற்று வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த வருவாய்த்துறையினர், "சொந்த மாநிலத்தில் இருந்து 24 நபர்களை அழைத்து வந்த இந்த நபர் அவர்களைச் சட்டவிரோதமாகக் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தியதுடன் முறையான ஊதியம் தராமலும் சொந்த ஊருக்குச் செல்லவிடாமல் அனுமதி மறுத்தும் வந்திருக்கிறார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட யுவராஜ் சிண்டோ மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். 24 நபர்களையும் திருமண மண்டபத்தில் தங்கவைத்து பராமரித்து வருகிறோம். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.



















