செய்திகள் :

ஈரான் போர்: ட்ரம்ப் சொன்ன 'அந்த' ஒரு வார்த்தை; கச்சா எண்ணெயின் திடீர் சரிவிற்குக் காரணம் என்ன?

post image

நேற்று இந்நேரம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி கிட்டத்தட்ட 114 டாலர்கள் அளவில் வர்த்தகமாகி வந்தது.

ஆனால், இன்று சரிந்து ஒரு பேரலுக்குச் சுமார் 85 டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இது கிட்டத்தட்ட 25 சதவிகித வித்தியாசம் ஆகும்.

இந்தத் திடீர் சரிவிற்குக் காரணம் என்ன?

> நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'விரைவில் ஈரான் போர் முடிவுக்கு வரும்' என்று தெரிவித்தார்.

> நேற்று கச்சா எண்ணெய் விலை ஏற்கெனவே ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி விட்டது. அடுத்து அது 150 டாலர்களைத் தொடுவதை விரும்பவில்லை ஜி7 நாடுகள்.

அதனால், அந்த நாடுகள் தங்களிடம் இருக்கும் மூலோபாயப் பெட்ரோலிய இருப்புக்களை சந்தைக்குள் எடுத்துவர தயாராக இருக்கிறது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

> நேற்று ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசிக்கொண்டனர்.

அது குறித்து அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட், 'ரஷ்யாவின் மில்லியன் கணக்கான எண்ணெய் பேரல்கள் மீது இருக்கும் வரிகளை நீக்க அமெரிக்கா யோசனையில் உள்ளது' என்று தெரிவித்தார்.

> நேற்று ட்ரம்ப் விரைவில் ஈரான் போர் முடியும் என்று சொன்னதும், பயத்தில் கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், அந்த முதலீடுகளை 'சட்டென' விற்றனர்.

இந்த 4 காரணங்களிலும் மிக முக்கியமானது - ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்கிற ட்ரம்பின் அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியானதுமே சரிவில் சென்று கொண்டிருந்த அமெரிக்க சந்தை கொஞ்சம் மீண்டது.

அடுத்ததாக, இதுவே தற்போது ஆசியச் சந்தைகளிலும் பிரதிபலித்துள்ளது. நேற்று 'சிவப்பு'களில் தத்தளித்த சந்தைகள், இப்போது பாசிட்டிவாக மாறியுள்ளன.

கேரளம்: "மற்றொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் கணவனைப் பார்த்தேன்" - அமைச்சர் மீது மனைவி புகார்

கேரள இடது ஜனநாயகக் கூட்டணி அரசில் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் கே.பி.கணேஷ் குமார். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவரது தந்தை பாலகிருஷ்ணபிள்ளைத் தொடங்கிய கேரளா காங்கிரஸ்(பி) என்ற ... மேலும் பார்க்க

கே.என்.பணிக்கர் மறைவு: "கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர்" - பினராயி விஜயன் இரங்கல்

நவீன இந்தியாவின் முன்னணி வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரும் காலடி ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கே.என்.பணிக்கர் (90) நேற்று காலமானார். ஸ்ட்ரோக் காரணமாக நேற்று மதியம் அவரை... மேலும் பார்க்க

போர்களில் கொல்லப்படும் குழந்தைகள்... உறங்குகிறதா உலகின் மனசாட்சி?

உலகில் நடக்கும் ஒவ்வொரு போரும் குழந்தைகளுக்கு எதிரான போர்தான். தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தும் போரால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள குழந்தைகளின் உயிர்கள், அதிகாரப் பசி ஏந்... மேலும் பார்க்க