செய்திகள் :

இலவசப் பயணம்: ``எங்க மச்சான்களுக்கு செலவைக் குறைக்கத்தான்..." - அமைச்சர் பார்த்திபன் பதில்

post image

நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் செய்தியாளர்களை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, செய்தியாளர்கள் `பெண்களுக்கு மட்டும் இலவசப் பேருந்து பயணத் திட்டம் வழங்கப்படுகிறது. ஆண்களுக்கும் இந்தத் திட்டம் வழங்கப்படுமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ``எங்க மச்சான்களுக்கு செலவை குறைக்கணும்னுதான் எங்க தங்கச்சிகளுக்கு இலவசப் பேருந்து திட்டத்தை கொடுத்திருக்கிறோம். குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்கள் சகோதரர்களையோ அல்லது மற்ற உறவினர்களையோ பணத்திற்காக எதிர்பாராமல் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம். இதனால் குடும்பப் பொருளாதாரச் சுமை பெருமளவு குறைந்துள்ளது.

மின்சார ஏசி பேருந்துகள்
மின்சார ஏசி பேருந்துகள்

பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் (Speed Governors) மூலம் அரசு நிர்ணயித்த குறிப்பிட்ட வேகத்திலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், கிராமப்புறங்களையும் நகரங்களையும் இணைக்கும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். தமிழக அரசின் அனைத்துப் பேருந்துகளும் படிப்படியாகக் குளிர்சாதன (AC) வசதி கொண்ட பேருந்துகளாக மாற்றப்பட்டு வருகின்றன. ஆட்டோக்களில் கட்டண மீட்டர்கள் பொருத்தி உரிய கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் விரைவாக நடைமுறைப்படுத்தப்படும்." என்றார்.

``அடுத்தப் பிரதமர் யார்?" - கருத்து கணிப்பில் 3-வது இடம்; மம்தா-வை பின்னுக்கு தள்ளிய முதல்வர் விஜய்!

நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சர்ப்ரைஸ் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த 100 நாட்க... மேலும் பார்க்க

திருநெல்வேலி:தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர்; சுத்தப்படுத்த களமிறக்கப்பட்ட நவீன கருவி | Album

திருநெல்வேலி:தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்தப்படுத்த களமிறக்கப்பட்ட நவீன டெமோ கருவி.! மேலும் பார்க்க

சட்டமன்றம்: ``முதல்வர் உங்களிடம் என்ன பேசினார்?" - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` முதல்வர் விஜய் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்வது, மெட்ரோ ரயில் பயணம், புழல் சிறைக்குச் சென்று அங்கே பார்வையிடுவது போன்ற பல்வே... மேலும் பார்க்க

700 ஏக்கர் கண்மாயில் தொடரும் மணல் முறைகேடு - விவசாயிகள் புகார்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள வடகரை கண்மாய் சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாயைச் சுற்றியுள்ள 2,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இது முக்கியமான பாசன நீராதாரம... மேலும் பார்க்க

இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் எழுதியிருக்க முடியாது! – மரபுகளை மாற்றச் சொல்கிறார் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் விதம் குறித்த விவாதம் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போதைய பட்ஜெட் தாக்கல் நடைமுறையை கடுமையாக வி... மேலும் பார்க்க