செய்திகள் :

இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் எழுதியிருக்க முடியாது! – மரபுகளை மாற்றச் சொல்கிறார் பழனிவேல் தியாகராஜன்

post image

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் விதம் குறித்த விவாதம் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போதைய பட்ஜெட் தாக்கல் நடைமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, பல மணி நேரம் பட்ஜெட் உரையைத் தொடர்ந்து வாசிக்கும் முறையை மாற்றி, முக்கிய அம்சங்களை இயல்பான முறையில் அவையில் எடுத்துரைக்கும் புதிய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தற்போதைய பட்ஜெட் உரையைப் பார்க்கும்போது, அதை தற்போதைய நிதி அமைச்சரே முழுமையாக எழுதியிருக்க முடியாது என்பது எனது கணிப்பு. அதிகாரிகள் தயாரித்துக் கொடுத்த நீண்ட ஆவணத்தை அமைச்சர் அவையில் வாசிப்பதால்தான், நீண்ட நேர உரையின்போது வாசிப்பதில் தடுமாற்றங்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன.

நான் பட்ஜெட்டைத் தயாரித்தபோது, அந்த ஆவணத்தை நானேதான் எழுதினேன் என்று உறுதியாகச் சொல்ல முடியும். முதலில் ஆங்கிலத்தில் எழுதுவேன். பின்னர் அதை தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, ஒன்றுக்கு இரண்டு முறை பயிற்சி எடுத்துக்கொண்டு அவையில் வாசிப்பேன். அப்படி தயாராக இருந்தாலும், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒரு நீண்ட ஆவணத்தை வாசிப்பது மிகவும் கடினமான விஷயம்.

நிதி அமைச்சர் மரிய வில்சன்

பட்ஜெட் உரையை வாசிக்கும் நடைமுறையில் சில மரபுகள் தேவையானதாக இருந்தாலும், அவற்றில் சிலவற்றை காலத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  குறிப்பாக, சட்டமன்றத்தில் நீண்ட நேரம் எழுத்து வடிவிலான உரையை வாசிப்பதற்குப் பதிலாக, மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இயல்பான உரையாடல் பாணியில் முக்கியமான அறிவிப்புகளை எடுத்துரைக்கலாம்.

நான் பொதுவாக எந்தத் தாள்களையும் வைத்துக்கொண்டு பேசுவதில்லை. 99 சதவிகித நேரம் நேரடியாகத்தான் பேசுவேன். புள்ளிவிவரங்களைக்கூட நினைவில் வைத்துக்கொண்டு பேசும் பழக்கம் எனக்கு இருக்கிறது. இரண்டு மணி நேரம் பேச வேண்டிய சூழல் என்றால், முக்கியமான எண்களை மட்டும் ஒரு குறிப்புச் சீட்டில் வைத்துக்கொண்டு பேசலாம். அப்படி பேசும்போது உரை இயல்பாகவும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

இன்றைய டிஜிட்டல் காலத்தில் பட்ஜெட்டின் ஒவ்வொரு விவரமும் இணையத்தில் வெளியிடப்படும் நிலையில், சட்டமன்றத்தில் முழு பட்ஜெட் ஆவணத்தையும் நீண்ட நேரம் வாசிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை மட்டும் சபையில் இயல்பான முறையில் எடுத்துரைத்துவிட்டு, முழு ஆவணத்தையும் அவைக் குறிப்பில் இடம்பெறச் செய்து, பின்னர் அதன்மீது விரிவான விவாதத்தை நடத்தும் நடைமுறையைப் பின்பற்றலாம்.

பழனிவேல் தியாகராஜன்

அதிகாரிகளின் சிந்தனை என்பது பெரும்பாலும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மரபுகளைத் தொடர்ந்து கொண்டுசெல்லும் வகையிலேயே உள்ளது. புதிய கோணத்தில் சிந்திப்பது, அதாவது ‘Out of the box thinking’ என்பது குறைவாக இருக்கிறது.

பட்ஜெட் என்பது வெறும் புள்ளிவிவரங்களையும் நீண்ட ஆவணங்களையும் வாசிக்கும் நிகழ்வாக இல்லாமல், அரசின் கொள்கைகள் மற்றும் மக்களுக்கான திட்டங்களை எளிமையாக விளக்கும் முக்கியமான தருணமாக இருக்க வேண்டும் என்பதே கருத்தின் மையமாக உள்ளது. எனவே, காலத்துக்கு ஏற்ப சட்டமன்றத்தின் பட்ஜெட் தாக்கல் மரபுகளிலும் மாற்றம் கொண்டுவருவது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்” என்றார்.

திருநெல்வேலி:தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர்; சுத்தப்படுத்த களமிறக்கப்பட்ட நவீன கருவி | Album

திருநெல்வேலி:தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்தப்படுத்த களமிறக்கப்பட்ட நவீன டெமோ கருவி.! மேலும் பார்க்க

சட்டமன்றம்: ``முதல்வர் உங்களிடம் என்ன பேசினார்?" - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` முதல்வர் விஜய் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்வது, மெட்ரோ ரயில் பயணம், புழல் சிறைக்குச் சென்று அங்கே பார்வையிடுவது போன்ற பல்வே... மேலும் பார்க்க

இலவசப் பயணம்: ``எங்க மச்சான்களுக்கு செலவைக் குறைக்கத்தான்..." - அமைச்சர் பார்த்திபன் பதில்

நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் செய்தியாளர்களை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, செய்தியாளர்கள் `பெண்களுக்கு மட்டும் இலவசப் பேருந்து பயணத் ... மேலும் பார்க்க

700 ஏக்கர் கண்மாயில் தொடரும் மணல் முறைகேடு - விவசாயிகள் புகார்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள வடகரை கண்மாய் சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாயைச் சுற்றியுள்ள 2,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இது முக்கியமான பாசன நீராதாரம... மேலும் பார்க்க

கூடலூர்: ஆட்கொல்லி புலி விவகாரம்; 2-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! - பதற்றத்தில் காவல்துறை!

நாட்டில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் யானை, புலி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகளின் எதிர்கொள்ளல்களால் உயிரிழந்து... மேலும் பார்க்க

Belonging: A Journey of Love: சோனியா காந்தியின் புத்தகம்: வெளியீட்டுக்கு முன்பே மாறும் பதிப்பகம்!

சோனியா காந்தியின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணங்களைப் பதிவு செய்துள்ள ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) தன்வரலாற்றுப் புத்தகம், வரும் நவம்பர் 10-ம் தேதி உலகளவில் வெளியாகிறத... மேலும் பார்க்க