செய்திகள் :

`இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை; அமித் ஷா அவைக்கு வராதது ஏன்?'- நாடாளுமன்றத்தில் ராகுல்

post image

நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அமித் ஷா அவைக்கு வராதது ஏன்? அவருக்கு துணிச்சல் இல்லையா?

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறை அல்லது வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. அது நாட்டின் இளைஞர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் ஆழமான வெளிப்பாடு.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மாணவர்கள் நடத்திய போராட்டம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்திருக்கிறது. இளைஞர்கள் தங்களது எதிர்காலம் குறித்து கொண்டுள்ள கவலை மற்றும் எதிர்பார்ப்புகளையே அந்த போராட்டம் வெளிப்படுத்தியது.

இந்த மாணவர் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. ஆளும் பாஜக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்களின் ஜனநாயகப்பூர்வமான கருத்து வெளிப்பாட்டை மதிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் தவறு எதுவும் இல்லை.

இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தக் கூடாது. எதிர்காலத்தை சிந்தித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களை அரசு முட்டாள்கள் என சித்திரிக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மாணவர்கள் போராட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை" என்று ராகுல் காந்தி அவையில் பேசியிருக்கிறார். ராகுலின் இந்தக் கருத்துக்கு பாஜக எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

NEET 2026 முறைகேடு: 13 கைது, 360 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை - CBI சொல்வது என்ன?

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி கடந்த ஒரு மாதமாக இந்தியாவையே உலுக்கி எடுத்தப் போராட்டம், 'நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிரான காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம்'.இந்தப் போராட்டத்தின் வெற்றியாக கடந்த சனிக்க... மேலும் பார்க்க

'ஆர்த்தோ டாக்டர்களுடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்!' - முதல்வரை எச்சரித்த திமுக கவுன்சுலர்!

சென்னை ரிப்பன் பில்டிங்கில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை எச்சரிப்பதை போல பேசியிருந்தார்.மாமன்ற கூட்டம்நேரமில்லா நே... மேலும் பார்க்க

'சென்னை மாநகராட்சியில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்பட்டதா?' - மனம் வருந்திய விசிக கவுன்சிலர்!

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் விசிக கவுன்சிலர் கோபிநாத், மாநகராட்சி மாமன்ற அரங்கில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்படுவதா... மேலும் பார்க்க

மன்னார்குடி: டி.ஆர்.பாலு மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவா?

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 41 இடங்களில் இன்று ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக தி... மேலும் பார்க்க

அமெரிக்க தளத்தில் ஈரான் தாக்குதல், ட்ரம்ப்-நெதன்யாகு, ஜெலன்ஸ்கி மீட், ஈராக் தாக்குதல் ஏன்?|#AllInOne

ஈரான் போர், அதிபர்கள் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய உலக செய்திகளை இங்கே சின்னச் சின்ன செய்திகளாக காணலாம். ஈரான் தாக்குதல்: ஜூலை 24-ம் தேதிக்கு முன்பு, தொடர்ச்சியாக 13 நாள்கள், அமெரிக்கா, ஈரான் இடையே மோதல... மேலும் பார்க்க

பொறுப்பும் கொடுக்கவில்லை… மரியாதையும் அளிக்கவில்லை! - தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள் புலம்பல்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தற்போதைய சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவில் இணை... மேலும் பார்க்க