செய்திகள் :

'சென்னை மாநகராட்சியில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்பட்டதா?' - மனம் வருந்திய விசிக கவுன்சிலர்!

post image

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் விசிக கவுன்சிலர் கோபிநாத், மாநகராட்சி மாமன்ற அரங்கில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்படுவதாக மனம் வருந்தி பேசியிருக்கிறார்.

கவுன்சிலர் கோபிநாத்
கவுன்சிலர் கோபிநாத்

நேரமில்லா நேரத்தில் பேசிய விசிக கவுன்சிலர் கோபிநாத், ``மாமன்றக் கூட்ட அரங்கில் சில மாதங்களுக்கு முன்பு வரை அம்பேத்கரின் புகைப்படம் மேயர் அமர்ந்திருக்கும் முகப்பு பக்கத்தில் மாட்டப்பட்டிருந்தது. ஆனால், இப்போது முதல்வர், முன்னாள் முதல்வரின் படத்தை மாட்டுவதற்காக அம்பேத்கரின் படத்தை மட்டும் கழற்றி மாமன்றக் கூட்டத்தின் ஒரு மூலையில் மாட்டியிருக்கிறார்கள்.

மேயரின் தலைக்கு மேல் காந்தியின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தை உங்களால் இப்படி மூலையில் மாட்ட முடியுமா? அம்பேத்கர் பள்ளியில் படிக்கும் போது கோணிப்பையில் ஒரு மூலையில் அமர வைக்கப்பட்டார்.

அம்பேத்கர் படம்
அம்பேத்கர் படம்

அதேமாதிரி, இப்போதும் அவரை மூலையில் மாட்டியிருக்கிறீர்கள். இதை பார்த்தாலே மனம் வருந்துகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை வரையறுத்த சட்டமேதைக்கே இந்த நிலையா? உங்களால் முடியவில்லை என்றால் சொல்லுங்கள். நாங்கள் அம்பேத்கரின் படத்தை கழற்றிச் செல்கிறோம். எப்போது எங்களால் முடிகிறதோ அப்போது நாங்கள் பிரதான இடத்தில் அம்பேத்கரின் படத்தை மாட்டிக் கொள்கிறோம்" என வருந்தி பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ``இது பழைய கட்டடம். இங்கே போதுமான இடமில்லை. அதனால்தான் மாமன்றக் கூட்ட அரங்கிலேயே இன்னொரு இடத்தில் அதுவும் வள்ளுவரின் புகைப்படம் அருகேதான் அம்பேத்கரின் படத்தை மாட்டியிருக்கிறோம். நாங்களும் அம்பேத்கர் வழி வந்தவர்கள்தான். நீங்கள் இப்படி பேசுவது வெளியே வேறு மாதிரியாக புரிந்துகொள்ளப்படலாம். உங்களின் கோரிக்கையை பரிசீலிக்கிறோம்" என்றார்.

மேயரின் தலைக்கு மேல் மாட்டப்பட்டிருக்கும் படங்கள்
மேயரின் தலைக்கு மேல் மாட்டப்பட்டிருக்கும் படங்கள்

இதற்கு பதிலளித்த திமுக கவுன்சிலர்கள் வே.ராஜனும் பரிதி இளம் சுருதியும் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும் ஸ்டாலினும் அம்பேத்கர் பெயரில் அறிமுகப்படுத்திய திட்டங்களை குறிப்பிட்டுப் பேசியிருந்தனர்.

NEET 2026 முறைகேடு: 13 கைது, 360 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை - CBI சொல்வது என்ன?

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி கடந்த ஒரு மாதமாக இந்தியாவையே உலுக்கி எடுத்தப் போராட்டம், 'நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிரான காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம்'.இந்தப் போராட்டத்தின் வெற்றியாக கடந்த சனிக்க... மேலும் பார்க்க

'ஆர்த்தோ டாக்டர்களுடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்!' - முதல்வரை எச்சரித்த திமுக கவுன்சுலர்!

சென்னை ரிப்பன் பில்டிங்கில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை எச்சரிப்பதை போல பேசியிருந்தார்.மாமன்ற கூட்டம்நேரமில்லா நே... மேலும் பார்க்க

`இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை; அமித் ஷா அவைக்கு வராதது ஏன்?'- நாடாளுமன்றத்தில் ராகுல்

நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அமித் ஷா அவைக்கு வராதது ஏன்? அவருக்கு துணிச்சல் இல்லையா? நீட் ... மேலும் பார்க்க

மன்னார்குடி: டி.ஆர்.பாலு மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவா?

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 41 இடங்களில் இன்று ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக தி... மேலும் பார்க்க

அமெரிக்க தளத்தில் ஈரான் தாக்குதல், ட்ரம்ப்-நெதன்யாகு, ஜெலன்ஸ்கி மீட், ஈராக் தாக்குதல் ஏன்?|#AllInOne

ஈரான் போர், அதிபர்கள் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய உலக செய்திகளை இங்கே சின்னச் சின்ன செய்திகளாக காணலாம். ஈரான் தாக்குதல்: ஜூலை 24-ம் தேதிக்கு முன்பு, தொடர்ச்சியாக 13 நாள்கள், அமெரிக்கா, ஈரான் இடையே மோதல... மேலும் பார்க்க

பொறுப்பும் கொடுக்கவில்லை… மரியாதையும் அளிக்கவில்லை! - தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள் புலம்பல்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தற்போதைய சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவில் இணை... மேலும் பார்க்க