செய்திகள் :

AI தொழில்நுட்பத்துடன் சாலைத் திட்டங்கள் - நிலம் கையகப்படுத்த புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கும் CUMTA

post image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Web GIS தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA - Chennai Unified Metropolitan Transport Authority ) டெண்டர் வெளியிட்டுள்ளது.

தற்போது புதிய சாலைத் திட்டங்களை செயல்படுத்தும்போது, எந்தெந்த நிலங்கள் பாதிக்கப்படும், எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும், அதன் மதிப்பு என்ன என்பதைக் கணக்கிட அதிகாரிகள் GIS வரைபடங்கள், நில உரிமை ஆவணங்கள், வருவாய்த் துறை பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆவணங்களை தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் திட்டமிடல் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது.

சாலை பணிகள்

இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து நில விவரங்களையும் ஒரே டிஜிட்டல் வரைபடத்தில் ஒருங்கிணைக்கும் Web GIS தளத்தை உருவாக்க CUMTA திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே PDF மற்றும் AutoCAD (DWG) வடிவில் உள்ள சாலை வரைபடங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானாக அடையாளம் கண்டு, அவற்றை டிஜிட்டல் சாலைப் பதிவேடாக மாற்றும் வசதியும் இதில் இடம்பெற உள்ளது.

இந்த புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தால், புதிய சாலைத் திட்டங்களுக்கு தேவையான நிலத்தின் பரப்பளவு, கையகப்படுத்தும் செலவு, பாதிக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட தகவல்களை மிகக் குறுகிய நேரத்தில் துல்லியமாக கணக்கிட முடியும். இதன் மூலம் திட்டமிடல் வேகமடைவதுடன், நிலம் கையகப்படுத்தும் செலவையும் முன்கூட்டியே மதிப்பிட முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் தரவுகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து, AI உதவியுடன் PDF மற்றும் DWG வரைபடங்களில் உள்ள தகவல்களை டிஜிட்டல் தரவுகளாக மாற்றுவதன் மூலம் திட்டத் தாமதங்களை குறைத்து, சாலை உள்கட்டமைப்பு பணிகளை விரைவாக நிறைவேற்ற இந்த தொழில்நுட்பம் உதவும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையமான CUMTA, சென்னை மாநகர எல்லையை மட்டுமல்லாமல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) வரம்பிற்குட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் போக்குவரத்து மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மன்னார்குடி: டி.ஆர்.பாலு மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவா?

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 41 இடங்களில் இன்று ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக தி... மேலும் பார்க்க

அமெரிக்க தளத்தில் ஈரான் தாக்குதல், ட்ரம்ப்-நெதன்யாகு, ஜெலன்ஸ்கி மீட், ஈராக் தாக்குதல் ஏன்?|#AllInOne

ஈரான் போர், அதிபர்கள் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய உலக செய்திகளை இங்கே சின்னச் சின்ன செய்திகளாக காணலாம். ஈரான் தாக்குதல்: ஜூலை 24-ம் தேதிக்கு முன்பு, தொடர்ச்சியாக 13 நாள்கள், அமெரிக்கா, ஈரான் இடையே மோதல... மேலும் பார்க்க

பொறுப்பும் கொடுக்கவில்லை… மரியாதையும் அளிக்கவில்லை! - தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள் புலம்பல்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தற்போதைய சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவில் இணை... மேலும் பார்க்க

'திமுக திட்டத்துல நீங்க ஏன் ஸ்டிக்கர் ஒட்டுறீங்க!' - முதல்வருக்கு எதிராக கொந்தளித்த திமுக கவுன்சிலர்

ஜூலை மாதத்துக்கான சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.வே.ர... மேலும் பார்க்க

'151 உயர்சிறப்பு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை இழந்தது ஏன்?'- TVK அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. இடங்களை வீணடிக்காமல் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (All Ind... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல் - மதுபான ஆலைகளிடம் Party fund? - DVAC வழக்கின் பின்னணி?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும்... மேலும் பார்க்க