செய்திகள் :

'அரசுப் பேருந்துகளில் Earphone இல்லாமல் பாட்டு கேட்கக்கூடாது' - போக்குவரத்துத்துறையின் உத்தரவு என்ன?

post image

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணிகள் சுமுகமாகப் பயணிக்க சில நெறிமுறைகளைக் கூறி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அனைத்து மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கு போக்குவரத்துத்துறை அரசுச் செயலாளர் நிர்மல்ராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

என்னென்ன நெறிமுறைகள்?

> அரசுப் பேருந்துகளில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும்.

இயர்போன்
இயர்போன்

> பயணத்தின்போது, கைப்பேசியில் உரத்த குரலில் பேசுவது, கைப்பேசியில் உள்ள ஸ்பீக்கரைப் பயன்படுத்துவது, இயர்போன் அல்லது ஹெட் போன் இல்லாமல் கைப்பேசியில் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது போன்றவைக் கூடாது.

> அரசுப் பேருந்துகளின் உட்புறத்தில் பயணிகளுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில், 'கைப்பேசியில் ஸ்பீக்கர் ஒலி வேண்டாம்!' என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். இந்த ஸ்டிக்கர் பேருந்தின் உட்புறம், நடுப்புறம், வெளிப்புறம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

> இந்த வழிமுறைகளை பயணிகள் தவறாமல் கடைப்பிடிப்பதைப் பணி நேரத்தின்போது டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

'திமுக திட்டத்துல நீங்க ஏன் ஸ்டிக்கர் ஒட்டுறீங்க!' - முதல்வருக்கு எதிராக கொந்தளித்த திமுக கவுன்சிலர்

ஜூலை மாதத்துக்கான சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.வே.ர... மேலும் பார்க்க

'151 உயர்சிறப்பு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை இழந்தது ஏன்?'- TVK அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. இடங்களை வீணடிக்காமல் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (All Ind... மேலும் பார்க்க

AI தொழில்நுட்பத்துடன் சாலைத் திட்டங்கள் - நிலம் கையகப்படுத்த புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கும் CUMTA

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Web GIS தொழில்நுட்பங்களை ஒரு... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல் - மதுபான ஆலைகளிடம் Party fund? - DVAC வழக்கின் பின்னணி?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும்... மேலும் பார்க்க

"30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி; நாங்க நிலம் தரணுமா?" - சின்ன மண்டலவாடி மக்கள் அதிருப்தி

குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டிய அங்கன்வாடி மையமே கடந்த 30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டு வரும் அவலநிலை. திருப்பத்தூர் மாவட்டம், ... மேலும் பார்க்க

''அதிகாலை 5 மணி வேணாம்!" தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் நேர மாற்றம் கோரிக்கை!

தாம்பரம் - தென்காசி ரயில் வழித்தடத்தில் இரு வழி மார்க்கமாக சிறப்பு ரயில்கள் வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையில் 6 நாட்கள் இயக்கவிருப்பதாக தென்னக ரயில்வே துறையிலிருந்து அறிவிப்பு சி... மேலும் பார்க்க