செய்திகள் :

`முதல்வர் விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை; அதே சீமான் பற்றி பேசினால் இல்லையா?' - நீதிமன்றம் கேள்வி

post image

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில், `நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 100 கோடி ரூபாய் பெற்றதாக அடிப்படை ஆதாரமற்று அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட  யூடியூபர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கெளரி, "திமுக எம்.எல்.ஏ முதல்வர் விஜய்யைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கு நடவடிக்கை எடுக்கிறீர்கள். பழனி நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பற்றி வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறீர்கள்! ஆனால் சீமான் பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?

விஜய், சீமான்

அரசியலில் வெற்றி தோல்வி வரும், போகும்... ஆனால் தமிழகத்தில் சீமான் தவிர்க்க முடியாத ஒரு தலைவர். இந்த மாதிரியான விஷயங்களை நீதிமன்றம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது.

சீமான் குறித்து அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் மார்பிங் செய்யபட்ட புகைப்படங்களை இன்றைக்குள் நீக்கிவிட்டு நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'ரயில் நிலையத்திற்குச் சென்று தட்கல் டிக்கெட் எடுப்பவரா நீங்க?' - இனி ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் நடைமுறை

வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்குப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. என்ன நடைமுறை? இனி பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் டிக்கெட் புக் செய்ய நீண்ட நே... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி ரத்து! - நீதிமன்றம் கூறியதென்ன?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிஉயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர... மேலும் பார்க்க

தருமபுரி: கொரில்லா வேடமிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு; போலீஸாரின் நூதனப் பிரசாரம் | Photo Album

தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வுதருமபுரியில் ஹெல்மெட் விழ... மேலும் பார்க்க

CJP Protest: கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி! - போராட்டத்தை வாபஸ் பெற்ற காக்ரோச் ஜனதா கட்சி

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தைக் காக்ரோச் ஜனதா கட்சி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. Dharmend... மேலும் பார்க்க

"இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா பற்றி ராகுல் காந்தி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ... மேலும் பார்க்க

'கரப்பான்பூச்சிகளுடன் மோதாதீர்கள்; நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!' - ராஜினாமா பற்றி அபிஜித் தீப்கே

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ... மேலும் பார்க்க