செய்திகள் :

'கரப்பான்பூச்சிகளுடன் மோதாதீர்கள்; நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!' - ராஜினாமா பற்றி அபிஜித் தீப்கே

post image

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மாணவர்களின் போராட்டத்திற்கும், கடுமையான எதிர்ப்பிற்கும் பிறகு இன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இது நமக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பது குறித்து சி.ஜே.பி-யின் நிறுவனர் அபிஜித் தீப்கே, "இதுதான் ஜனநாயகம். அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் சும்மா போக மாட்டோம்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்.

அந்த குடும்பங்கள் அனைத்துக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இரண்டாவதாக, கடந்த 20-ம் தேதி அராஜகம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அந்த போலிஸ் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், 'காக்ரோச்' உடன் மோதாதீர்கள்."

Dharmendra Pradhan: மாணவர்களின் தொடர் போராட்டம்; பதவியை ராஜினாமா செய்த மத்திய கல்வித்துறை அமைச்சர்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை (NTA) தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பி... மேலும் பார்க்க

அன்று கடும் கண்டனம், இன்று மெளனம்! - லாக்கப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது CM சார்?

திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் அடைந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்... இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களு... மேலும் பார்க்க

`ஒருவருக்கு பின்னால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடுவது விந்தையாக இருக்கிறது'- குடியரசு துணை தலைவர்

குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ராதாகிருஷ்ணன் ம... மேலும் பார்க்க

ஈரோடு: கொரில்லா, ஓநாய் வேடத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு; காவல்துறை நூதனப் பிரசாரம் | Photo Album

ஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில... மேலும் பார்க்க

VB-GRAM (G) திட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க புதிய நடைமுறைகள்; ஊரக வளர்ச்சித் துறை உத்தரவு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் VB-GRAM (G) Scheme 2025 திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்டுள... மேலும் பார்க்க