செய்திகள் :

`ஒருவருக்கு பின்னால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடுவது விந்தையாக இருக்கிறது'- குடியரசு துணை தலைவர்

post image

குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ராதாகிருஷ்ணன் மட்டுமின்றி அவரின் குடும்பத்தினர் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆகியோர் உடனிருந்தனர். சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டம் குறித்து பேசிய சி.பி ராதாகிருஷ்ணன், "அரசியல் தலைவர்கள் எப்போதுமே மக்களின் உண்மையான உணர்வுகளையும் தேவைகளையும் துல்லியமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

யாரோ ஒரு என்.ஆர்.ஐ ஒருவர் திடீரென ஞானோதயம் வந்ததைப் போல ஒன்றைச் சொல்கிறார். அவருக்குப் பின்னால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடுவது என்பது விந்தையாக இருக்கிறது. இது உண்மையிலேயே மன மகிழ்ச்சி தருகின்ற நிகழ்வு அல்ல. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்றார். குடியரசு துணை தலைவரின் இந்த 2 நாள் வருகை காரணமாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஈரோடு: கொரில்லா, ஓநாய் வேடத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு; காவல்துறை நூதனப் பிரசாரம் | Photo Album

ஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில... மேலும் பார்க்க

VB-GRAM (G) திட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க புதிய நடைமுறைகள்; ஊரக வளர்ச்சித் துறை உத்தரவு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் VB-GRAM (G) Scheme 2025 திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்டுள... மேலும் பார்க்க

`இந்தியாவிலேயே ஒரே முதல்வர் இவர்தான்!'- சூப்பர் எல் நினோ குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொல்வதென்ன?

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்து கூறியிருக்கிறார். சூப்பர் ... மேலும் பார்க்க

`அல்லேரிக்கு விரைவில் சாலை வசதி’ - ஜூ.வி., ஆக்‌ஷன் ஸ்டோரி... மலைவாழ் மக்களிடம் ஆட்சியர் உறுதி!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம் `அல்லேரி’. ஜவ்வாது மலைத்தொடரின் ஒரு பகுதியான அல்லேரிக்குச் செல்ல வேண்டுமானால், அடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான காட... மேலும் பார்க்க

சரியும் இந்திய ரூபாய் மதிப்பு: 2 காரணங்கள் என்னென்ன? கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி

ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.92-93 என வலுவான இந்திய ரூபாயின் மதிப்பு, இப்போது மீண்டும் ரூ.96-ஐ தாண்டி சறுக்கியுள்ளது. என்ன காரணம்? இந்தச் சறுக்கலுக்கு ஈர... மேலும் பார்க்க