செய்திகள் :

ஈரானுக்கு ரஷ்யா உதவுகிறதா? "நேரடியாக புதினிடமே கேட்பேன்" - உக்ரைனின் குற்றச்சாட்டு குறித்து ட்ரம்ப்

post image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "வான்வெளி புகைப்படங்களை அனுப்பி ஈரானுக்கு ரஷ்யா போரில் உதவுகிறது" என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஜெலன்ஸ்கியின் கூற்று குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடன் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரது பதில்...

"அது உண்மையா என்று நாம் தெரிந்துகொள்வோம். நான் புதினிடமே இதைப் பற்றி நேரடியாகக் கேட்பேன். உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

ஆனால், அது (உண்மையென்றாலும்) பெரியளவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் நாம் ஈரானை அடித்து நொறுக்கிவிட்டோம். ரஷ்யா, வெனிசுலாவிற்கு ஏராளமான ராணுவத் தளவாடங்களைக் கொடுத்தார்கள்.

ட்ரம்ப் - புதின்
ட்ரம்ப் - புதின்

வெனிசுலாவிடம் எல்லாமே ரஷ்யத் தயாரிப்புகளாகத்தான் இருந்தன. ஆனால் அதன் பலன் என்னவாக இருந்தது? பெரியளவில் பலனளிக்கவில்லை.

ஈரானுக்கும் ரஷ்யா ஆதரவு அளித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்திருந்தாலும் அது எந்தப் பலனையும் தரவில்லை. ஏனென்றால், ஈரானிடம் ராணுவமும் இல்லை, விமானப்படையும் இல்லை, கடற்படையும் இல்லை, எதுவுமே இல்லை.

ரஷ்யா அப்படிச் செய்கிறது என்று நான் நினைக்கவில்லை. நிச்சயமாகப் பெரியளவில் செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே செய்திருந்தாலும், அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை"

பீகார்: 'ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல்' மாணவர் போராட்டத்தில் காவலர் கையில் AK-47 - என்ன நடந்தது?

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை எதிர்த்து பீகாரில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) 'பீகார் பந்த்' என்கிற பெயரில் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த ஜூலை 25-ம் தேதி, பீகாரின் சிவான் மாவட்டத்த... மேலும் பார்க்க

"அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி" - வருந்தும் சொந்த கிராம‌ மக்கள்

தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மிகச் சமீபமாக அமைச்சர் ஜெகதீஸ்வரி சொந்தக் கட்சி நிர்வாகியிடம் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று சமூக ஊடகங்கள... மேலும் பார்க்க

M Sand, ஜல்லி: தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை - 9 காரணங்கள்!

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு 3 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது. என்ன உத்தரவு? சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் 'தமிழ்நாடு சட்டவிரோதக... மேலும் பார்க்க

'ATM மூலம் அரிசி, கோதுமை பெற்றுக்கொள்ளலாம்' - ஒடிசா போன்று கேரளத்தில் நடைமுறைப்படுத்த திட்டம்

​ஏ.டி.எம் மூலம் ​பணம் எடுப்பதைப் போல அரிசி, கோதுமை போன்ற தானியங்களையும் ஏ.டி.எம் மூலம் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கான தானிய ஏ.டி.எம்-களை கேரள மாநில உணவுத் துறை நிறுவ உள்ளது. இதற்கா... மேலும் பார்க்க

மாண்டெக் சிங் தலைமையில் தமிழ்நாடு வருவாயை உயர்த்த உயர்மட்ட குழு! யார் இவர், உறுப்பினர்கள் யார் யார்?

தமிழ்நாட்டில் 'வருவாய் பெருக்குக் குழு' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மரிய வில்சன் என்ன சொல்கிறார்? இந்தக் குழு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன், "கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மாநிலத்தி... மேலும் பார்க்க