செய்திகள் :

Uttar Pradesh: பேண்டில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்; அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த ஆசிரியை

post image

உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகில் உள்ள பண்டேபூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் கேசரி குமார் என்பவரின் 5 வயது மகன் படித்து வந்தான்.

அவன் வகுப்பறையில் இருக்கும்போது சிறுநீர் கழிக்க வாஷ்ரூம் செல்ல வேண்டும் என்று ஆசிரியையிடம் கேட்டான். ஆனால் ஆசிரியை அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் மாணவன் தனது பேண்டில் சிறுநீர் கழித்தார். உடனே ஆசிரியை அந்த மாணவனை வகுப்பறையில் அடித்துள்ளார்.

அதோடு அவனை வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அவனது அந்தரங்க உறுப்பில் சூடான கத்தியால் சூடுவைத்து மீண்டும் அடித்துள்ளார்.

மேலும் இது போன்ற காரியத்தை வகுப்பில் மீண்டும் செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார். பாதிக்கப்பட்ட சிறுவன் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினான்.

வகுப்பு
வகுப்பு

உடனே அவனது தந்தை பள்ளிக்கு வந்து எந்த ஆசிரியை இது போன்ற காரியத்தைச் செய்தது என்று மாணவனிடம் அடையாளம் காட்டும்படி கேட்டபோது ஆசிரியை பிரீத்தி குஷ்வாஹா என்பவரை அடையாளம் காட்டினான். இதையடுத்து அந்த ஆசிரியை மீது முறைப்படி மாணவனின் தந்தை கேசவ் குமார் போலீஸில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் சம்பந்தப்பட்ட ஆசிரியை மட்டுமல்லாது பள்ளி பிரின்சிபால் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

"கணவன் என்னை விவாகரத்தே செய்தாலும் அந்தப் பையன்தான் வேணும்" - மனைவி பிடிவாதம்; கணவன் விபரீத முடிவு

சண்டிகரைச் சேர்ந்த மோனு என்பவர் 8 ஆண்டுகளாக கோமல் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். எட்டு ஆண்டுக்குப் பிறகு இரு குடும்பத்தின் சம்மதத்தின் பேரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் ... மேலும் பார்க்க

100 கோடி கேட்டு கடத்தல்... ₹44 கோடியில் முடிந்த பேரம்; மாலியில் விடுவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைர வியாபாரி தீரு ரமாணி, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக குடும்பத்தினர் சுமார் 4 ... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய 2 ஆசிரியைகள் - QR Code மூலம் பணம் பெற்ற அதிர்ச்சி பின்னணி!

கேரள மாநிலத்தில் போதைப்பொருட்களை தடுக்கும் நோக்கில் `ஆபரேஷன் தூஃபான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆபரேஷன் தூஃபான் சோதனையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிஸ்வான் என்பவரை எம்.டி.எம்.ஏ போதைப்பொரு... மேலும் பார்க்க

சிவகாசி: தகர செட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; 4 பேர் உயிரிழந்த சோகம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வியாபாரம் செய்... மேலும் பார்க்க

தேனி: புறா பிடித்துத் தருவதாகக் கூட்டிச் சென்று 2 சிறுவர்கள் கொடூரக் கொலை; 19 வயது இளைஞர் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”குடும்பபே சின்னாபின்னமாகிடும்” - புகார் அளித்தவரை மிரட்டிய மருத்துவமனை உரிமையாளர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதி அருகே உள்ள நீலகிரி ஊராட்சியின், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன். அதிமுக பிரமுகரான இவர் கடந்த திமுக ஆட்சியின்போது திமுகவில... மேலும் பார்க்க