செய்திகள் :

"கணவன் என்னை விவாகரத்தே செய்தாலும் அந்தப் பையன்தான் வேணும்" - மனைவி பிடிவாதம்; கணவன் விபரீத முடிவு

post image

சண்டிகரைச் சேர்ந்த மோனு என்பவர் 8 ஆண்டுகளாக கோமல் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். எட்டு ஆண்டுக்குப் பிறகு இரு குடும்பத்தின் சம்மதத்தின் பேரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். கோமல் வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். மோனு ஆட்டோ ஓட்டினார். கோமலிடம் டியூசன் படிக்க சன்னி என்ற 20 வயது மாணவன் வந்தான். அவனுக்கும், கோமலுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட ஆரம்பித்தது.

இருவருக்கும் இடையேயான உறவு திருமணம் தாண்டிய உறவாக மாறியது. இது மோனுவிற்குத் தெரிய வந்தது. இதையடுத்து இந்த உறவைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் கைவிட முடியாது என்று கோமல் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதனால் இது குறித்து பேச இரு குடும்பத்தினரின் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இரு தரப்பினரும் கோமலிடம் எடுத்து கூறினர். ஆனால் கோமல் அவர்களின் பேச்சைக் கேட்க மறுத்துவிட்டார்.

''எனது கணவன் என்னை விவாகரத்து செய்தாலும், மாணவனைக் கைவிடமாட்டேன்'' என்று திட்டவட்டமாக கோமல் கூறிவிட்டார். அதோடு குழந்தையை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் தனிமையில் இருந்த மோனு வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தார்.

மன அழுத்தம் காரணமாக அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோமல் மீது மோனுவின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் கோமல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர்: விபத்து வழக்கில் காரை விடுவிக்க லஞ்சம்; கையும் களவுமாகப் பிடிபட்ட எஸ்.எஸ்.ஐ கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர், கடந்த 19-ம் தேதி தனது காரில் காவலூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவலூர் பகுதியைச் சேர்ந்த லட்... மேலும் பார்க்க

Uttar Pradesh: பேண்டில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்; அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த ஆசிரியை

உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகில் உள்ள பண்டேபூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் கேசரி குமார் என்பவரின் 5 வயது மகன் படித்து வந்தான். அவன் வகுப்பறையில் இருக்கும்போது சிறுநீர் கழிக்க வாஷ்ரூம் ச... மேலும் பார்க்க

100 கோடி கேட்டு கடத்தல்... ₹44 கோடியில் முடிந்த பேரம்; மாலியில் விடுவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைர வியாபாரி தீரு ரமாணி, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக குடும்பத்தினர் சுமார் 4 ... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய 2 ஆசிரியைகள் - QR Code மூலம் பணம் பெற்ற அதிர்ச்சி பின்னணி!

கேரள மாநிலத்தில் போதைப்பொருட்களை தடுக்கும் நோக்கில் `ஆபரேஷன் தூஃபான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆபரேஷன் தூஃபான் சோதனையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிஸ்வான் என்பவரை எம்.டி.எம்.ஏ போதைப்பொரு... மேலும் பார்க்க

சிவகாசி: தகர செட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; 4 பேர் உயிரிழந்த சோகம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வியாபாரம் செய்... மேலும் பார்க்க

தேனி: புறா பிடித்துத் தருவதாகக் கூட்டிச் சென்று 2 சிறுவர்கள் கொடூரக் கொலை; 19 வயது இளைஞர் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்... மேலும் பார்க்க