செய்திகள் :

தேனி: புறா பிடித்துத் தருவதாகக் கூட்டிச் சென்று 2 சிறுவர்கள் கொடூரக் கொலை; 19 வயது இளைஞர் கைது

post image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன்கள் ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள் இருவரும் மாலை 5 மணியளவில் வெளியில் சென்று இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் போடிநாயக்கனூர் ஊரகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரினைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாகத் தகவல் கிடைத்தது. 

அதனைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினரின் உதவியோடு மீட்கப்பட்ட உடல்கள், காணாமல் போன ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்த சிறுவர்கள்
உயிரிழந்த சிறுவர்கள்

மேலும் சிறுவர்களின் பெரியப்பா, வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இருவருக்கும் கூழ் வாங்கித் தந்ததாகவும், அப்போது அதே தெருவைச் சேர்ந்த கேசவ் பாலாஜி (19) என்ற இளைஞர் சிறுவர்களை அழைத்துச் சென்றதாகவும், கூறிய தகவலை அடுத்து கேசவ் பாலாஜியை அழைத்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. புறா பிடித்துத் தருவதாகக் கூறி சிறுவர்களை அழைத்துச் சென்ற கேசவ் பாலாஜி, கிணற்றுக்குள் புறா இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லி, இருவரையும் 150 அடி ஆழக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

Murder
Murder

தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கைது செய்யப்பட்டுள்ள கேசவ் பாலாஜியிடம் கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு சிறுவர்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்: ”குடும்பபே சின்னாபின்னமாகிடும்” - புகார் அளித்தவரை மிரட்டிய மருத்துவமனை உரிமையாளர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதி அருகே உள்ள நீலகிரி ஊராட்சியின், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன். அதிமுக பிரமுகரான இவர் கடந்த திமுக ஆட்சியின்போது திமுகவில... மேலும் பார்க்க

கேரளம்: தாயின் உடலை 3 நாள்கள் வீட்டில் வைத்து பூஜை; மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் போலீஸ் விசாரணை

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்தூப்புழா கூவக்காடு பகுதியில் உள்ள ஆர்.பி.எல் குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னத்தாம்மாள் (90). அவரது மகன் கிருஷ்ணசுவாமி (60). மனைவியைப் பிரிந்து வாழும் மறுவாழ்வுத... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டால் உயிருக்குப் போராடும் 4 வயது குழந்தை; காஃபி தோட்ட உரிமையாளரின் கொடூரச் செயல்

கூலி சம்பந்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காஃபி தோட்ட உரிமையாளர் தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில், 4 வயது குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் சிக்கமகளூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கா... மேலும் பார்க்க

2 வார `டிஜிட்டல்' கைது: போலீஸார் உஷார் செய்த பிறகே ரூ.8 கோடி சைபர் மோசடியை உணர்ந்த 73 வயது முதியவர்

முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் அல்லது அமலாக்கப்பிரிவு... மேலும் பார்க்க

ஹைதராபாத்: `புகார் கூறிய பெண் அதிகாரி என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்...' - உதய்கிருஷ்ணா ஐபிஎஸ்

"என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது, பாலியல் புகார் கொடுத்த பயிற்சி அரிகாரி என்னுடன் ஏற்கெனவே ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்தான்" என்று குற்றம்சாட்டப்பட்ட பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு த... மேலும் பார்க்க

பேராசிரியையுடன் நெருக்கம்; போட்டோ, வீடியோவை கணவருக்கு அனுப்பிய பேராசிரியர் - விசாரிக்கும் போலீஸ்!

திருச்சி, திருவெறும்பூர் அருகே தேசிய தொழில்நுட்ப கழகம் இயங்கி வருகிறது. அங்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பேராசிரியரா... மேலும் பார்க்க