செய்திகள் :

Zoho: ``நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' - கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

post image

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

அதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருந்த ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் சி.இ.ஓ-வுமான ஸ்ரீதர் வேம்பு, ``ஸ்ரீ தர்மேந்திர பிரதான் நான் அறிந்த மிகச்சிறந்த மக்கள் பணியாளர்களில் ஒருவர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

கிராமப்புற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது குறித்து அவருடன் நான் பலமுறை விவாதித்துள்ளேன். அவர் சுயநலமின்றி நாட்டின் நலனையே முதன்மையாகக் கருதியவர். அவர் ராஜினாமா செய்ததைக் கண்டு நான் மனவருத்தம் அடைகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அரசுக்குச் சாதகமான ஸ்ரீதர் வேம்புவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜோஹோ நிறுவனத்தின் தொழில் மற்றும் வணிக நலன்களைப் பாதுகாப்பதற்காகவே, அவர் மத்திய அரசுக்கும் அதன் அமைச்சருக்கும் ஆதரவாகப் பேசுகிறார் என்றும், அரசுக்குச் சாதகமாக நடப்பதாகவும் பல பயனர்கள் விமர்சித்திருந்தனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்ரீதர் வேம்பு ஒரு புதிய விளக்கப் பதிவை வெளியிட்டார். அதில், ``எங்கள் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 90 சதவீதம் இந்தியாவிற்கு வெளியிலிருந்தே வருகிறது.

ஸ்ரீதர் வேம்பு
ஸ்ரீதர் வேம்பு

அது கடுமையான உலகளாவியப் போட்டியில் ஈட்டப்பட்டது. அரசின் ஒப்பந்தங்கள் மூலம் எங்களுக்கு வெறும் 2 சதவீத வருவாய் மட்டுமே கிடைக்கிறது. அரசுடன் பணியாற்றும்போது கூட, வரி செலுத்துவோரின் பணத்தைச் சேமிப்பதையே கடமையாகக் கொண்டுள்ளோம்.

மேலும், எங்கள் பகுதியில் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் நாங்களும் ஒன்று. இடதுசாரி அரசு ஆட்சியில் இருந்தபோது கேரள ஸ்டார்ட்அப் மிஷனுக்கு ஆலோசனை வழங்கி, அங்குள்ள பல ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்தேன்.

அதேபோல், தமிழ்நாட்டில் நமது முதலமைச்சர் ஒரு சிறப்பான புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவரது முயற்சியை ஆதரிக்கிறேனே தவிர, அரசியல் சித்தாந்தத்திற்காக அல்ல. நான் நமது நாட்டை நேசிக்கிறேன், என் மனதில் தோன்றுவதைப் பேசுகிறேன்.

தாக்குதல்களுக்கோ அல்லது மிரட்டல்களுக்கோ நான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன். இதுபோன்ற தாக்குதல்கள் எங்களை மேலும் வலுப்படுத்தி, பெரிய வெற்றிகளை அடையவே உதவும்" எனக் குறிப்பிட்டிருக்கிரார்.

"மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி?"- மெட்ரோ ரயில் நிராகரிப்புக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்... மேலும் பார்க்க

சர்வதேச மீடியாவின் கவனத்தை ஈர்த்த போராட்டம்; பிரதானை இழக்க பாஜக சம்மதிக்கக் காரணமான 72 மணிநேர கெடு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. மாணவர்களின் பிரதான கோரிக்கையான மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்... மேலும் பார்க்க

கோவை: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேர் பணிநிடை நீக்கம்

கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் என 16 இடங்களில் உண்டியல... மேலும் பார்க்க

"முதல்வராகும் அனைத்து தகுதிகளும் சரத்குமாருக்கு உள்ளன" - நயினார் நாகேந்திரன் பாராட்டு

நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நேற்று ( ஜூலை.25) நடைபெற்றது.இந்த விழாவில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குப்பைக் கிடங்காக மாறிய பஞ்சுப்பேட்டை சாலை; கண்டுகொள்ளாத மாநகராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.அச்சாலையின் அருகே குப்பைகள் அதிகம் வீசப்பட்டு அவ்விடம் குப்பைக் கிடங்கைப் போல் காட்சியளிக்கிறத... மேலும் பார்க்க

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்; மீண்டும் நிராகரித்த மத்திய அரசு

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது மத்திய அரசு. சென்னையைத் தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்... மேலும் பார்க்க