செய்திகள் :

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்; மீண்டும் நிராகரித்த மத்திய அரசு

post image

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது மத்திய அரசு.

சென்னையைத் தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

கோவையில் 39 கி.மீ. தொலைவிற்கும், மதுரையில் 27 கி.மீ. தொலைவிற்கும் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது.

திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் வழங்கியது.

இதையடுத்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.

ஆனால், 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி, திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

மத்திய அரசு
மத்திய அரசு

இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து திட்ட அறிக்கையை அனுப்பியது.

ஆனால் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தும் அளவுக்கு மக்கள்தொகை இல்லை என்றும் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை என்று கூறி, இரண்டாவது முறையாக மத்திய அரசு கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது.

Zoho: ``நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' - கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது. போராட்டம் தீவிரம... மேலும் பார்க்க

கோவை: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேர் பணிநிடை நீக்கம்

கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் என 16 இடங்களில் உண்டியல... மேலும் பார்க்க

"முதல்வராகும் அனைத்து தகுதிகளும் சரத்குமாருக்கு உள்ளன" - நயினார் நாகேந்திரன் பாராட்டு

நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நேற்று ( ஜூலை.25) நடைபெற்றது.இந்த விழாவில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குப்பைக் கிடங்காக மாறிய பஞ்சுப்பேட்டை சாலை; கண்டுகொள்ளாத மாநகராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.அச்சாலையின் அருகே குப்பைகள் அதிகம் வீசப்பட்டு அவ்விடம் குப்பைக் கிடங்கைப் போல் காட்சியளிக்கிறத... மேலும் பார்க்க

"தர்மேந்திர பிரதான் தேசியக் கல்விக் கொள்கையைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்" - பிரகலாத் ஜோஷி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் த... மேலும் பார்க்க

Pralhad Joshi: RSS பின்புலம்; பல முறை எம்.பி; கல்வித்துறைக்குப் பொறுப்பேற்கும் பிரகலாத் ஜோஷி யார்?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியி... மேலும் பார்க்க