செய்திகள் :

ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?

post image

ஏற்கெனவே சில மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வந்தது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்த நிலையில், ஈரான் போர் தொடங்கியதும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.92-ஐ கடந்தது. அது விரைவில் ரூ.93-ஐ தொட்டுவிடுமோ என்கிற அச்சம் கூட நிலவி வருகிறது.

ஈரானிலிருந்து கிட்டத்தட்ட 2,800 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது இந்தியா. ஆனால், அங்கே நடக்கும் போரின் தாக்கம்தான் இந்திய ரூபாய் மதிப்பைத் தற்போது வீழ்ச்சியில் தள்ளி உள்ளது.

பொதுவாகப் பார்த்தால், இந்திய ரூபாய் வீழ்ச்சிக்குக் காரணங்கள்...
ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்
ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

> ஈரான் போர் தொடங்கியதும், எரிசக்திகளின் விலை கூடி வருகிறது... இன்னும் இதன் விலை கூடுமோ என்கிற அச்சம் வேறு இருந்து வருகிறது.

உலக வர்த்தகத்திற்குத் தேவை அமெரிக்க டாலர்கள். அதனால், உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் எரிசக்திகளை வாங்கவும், பாதுகாப்பான முதலீடாகவும் அமெரிக்க டாலர்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன.

இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்து வருகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.

இதற்கு இந்திய ரூபாயின் மதிப்பைக் கூட்டுவதுபோல எந்த விஷயமும் இப்போது நடக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.

> எரிசக்திகளைப் பெருமளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது என்பது உலகம் அறிந்த சேதி. எரிசக்திகளுக்கு இந்தியா பிற நாடுகளைச் சார்ந்து இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம் சந்தை மீதோ, நம் நாணயத்தின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை.

இதனால், இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அவர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகிறார்கள்.

இப்போது சொல்லப்போகும் காரணம் மிக முக்கியமானது...
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

மேலே சொன்னதுதான் - இந்தியா எரிசக்தி இறக்குமதிகளுக்குப் பிற நாடுகளைத்தான் சார்ந்துள்ளது.

இப்போது கச்சா எண்ணெய், எல்.பி.ஜி உள்ளிட்ட எரிசக்தி விலை சர்வதேச சந்தையில் விலையேறி போய் கிடக்கிறது. அவற்றை வாங்க இந்தியாவிற்கு அமெரிக்க டாலர்கள் வேண்டும்.

அமெரிக்க டாலர்கள் வலுவாக உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம். அது அப்படி வலுவாகி உள்ளதால், அதிக இந்திய ரூபாய்களைக் கொடுத்துதான் அமெரிக்க டாலர்களை வாங்க வேண்டியதாக இருக்கிறது.

அப்படி அதிக இந்திய ரூபாயைக் கொடுக்கும் போதே, அங்கே இந்திய ரூபாயின் மதிப்பு அடிபடுகிறது அல்லவா... இதனால்தான், தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு இறங்குமுகம் பக்கமாக உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு நிலையாக, ஈரான் போர் முடிய வேண்டும். அது எப்போது முடியும் என்பது அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் கையில் உள்ளது.

எங்கோ நடக்கும் போர் நம் சமையலறையை பாதிக்கிறது, அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது இந்தியா?

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடங்கிய போர் இரண்டு வாரங் களைக் கடந்துள்ளது. பெரும் உயிரிழப்புகள், பொருள் சேதம் என மேற்காசிய மக்கள் நிம்மதியிழந்துள்ளனர். கூடவே இப்போர், எண்ணெய், எரிவாயு வர்த்தகத்த... மேலும் பார்க்க

கடுமையாகும் ஈரான் போர்: முன்பை விட வேகமாக வலுவாகும் அமெரிக்க டாலர்! - இது 'எப்படி' சாத்தியம்?

ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.சொல்லப் போனால், இந்தப் போருக்குப் பின் தான், அமெரிக்க டாலரின் மதிப்பு பெரியளவில் வலுவடைந்து வருகிறது.இதற்கான '4' காரணங்கள்... மேலும் பார்க்க

போர்ச் சூழல்... முதலீட்டைப் பத்திரப்படுத்த இவற்றைச் செய்யுங்கள்!

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் நடத்தும் போர் தீவிரம் அடைந்து, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் போர்ச் சூழல் சூடுபிடித்துவருகிறது. அதன் விளைவாக பங்குச் சந்தை, தங்கம், வெள்ளி என எல்லாவற்றிலும் அதிரட... மேலும் பார்க்க

ஈரான் போர் நீடித்தால் இந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன?!

ஐந்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் மேலும் நீடித்தால் இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்று Quick Points ஆக பார்ப்போம்... வாங்க...> சர்வதேச சந்தையில் கச்சா எண்ண... மேலும் பார்க்க

வரி, வர்த்தகத் தடை, போர்... சர்வதேச நெருக்கடிகளைச் சமாளிக்க இந்தியாவுக்கு இதுதான் ஒரே வழி!

இன்று உலகின் ஏதோ ஓர் இடத்தில் ஏற்படும் அரசியல் பதற்றம், அதோடு தொடர்பில்லாத நாடுகளின் பொருளாதார நிலையையும் தலைகீழாக மாற்றி விடுகிறது. இது உலகமயமாக்கலின் தவிர்க்க முடியாத விளைவு. இதற்கு இந்தியாவும் விதி... மேலும் பார்க்க