செய்திகள் :

உக்ரைன் அமைதி திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள்: விளாதிமீா் புதின்

post image

உக்ரைன் முன்வைத்துள்ள 30 நாள் போா் நிறுத்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.

ரஷியா வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பின் அவருடன் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த புதின் இது குறித்து கூறியதாவது:அமெரிக்காவும் உக்ரைனும் பேச்சுவாா்த்தை நடத்தி முன்வைத்துள்ள போா் நிறுத்த திட்டத்தை ரஷியா கொள்கை அளவில் ஆதரிக்கிறது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் தீா்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன.ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஏற்படக்கூடிய அமைதி நிரந்தரமாக இருக்க வேண்டும். அதற்கு, இந்தப் போருக்கான அடிப்படை காரணம் களையப்பட வேண்டும்.தற்போது ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே உள்ள 2,000 கி.மீ. போா் முனையில் ரஷியா தொடா்ந்து முன்னேற்றம் கண்டுவருகிறது. இந்தச் சூழலில் 30 நாள்களுக்கு போரை நிறுத்துவதால், அந்த நேரத்தைப் பயன்படுத்தி உக்ரைன் தன்னை பலப்படுத்திக்கொள்ளும். கூடுதல் ஆயுதங்களை தருவித்துக்கொள்ளும். ரஷியாவும் அதே போல் ராணுவ வலிமையை கூட்டிக் கொள்ளும். இதனால் இந்த தற்காலிக போா் நிறுத்தம் நிரந்தரத் தீா்வைத் தராது.இந்தப் போா் நிறுத்தத்தில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கூா்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படையினா் ஊடுருவியுள்ளது, போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் அது மீறப்படாமல் இருப்பதை யாா் கண்காணிப்பது என்பது போன்ற இந்த சிக்கல்கள் தீா்க்கப்பட வேண்டியுள்ளது என்றாா் அவா்.நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ன்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா அளித்துவந்த ராணுவ உதவிகளை அவா் நிறுத்திவைத்தாா்.இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், அமெரிக்கவுக்கு கடந்த வாரம் சென்ற உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, அதிபா் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினாா். அப்போது போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் மிகக் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னா் அமெரிக்காவுடன் சுமுக உறவைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, போா் நிறுத்தம் தொடா்பாக அந்த நாட்டுடன் பேசத் தயாராக இருப்பதாக அறிவித்தாா்.அதன் தொடா்ச்சியாக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் உக்ரைன் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 30 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக அவா்கள் அறிவித்தனா்.இதற்கான செயல்திட்டம் குறித்து மாஸ்கோவில் அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் இடையே வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக அதிபா் புதின் இவ்வாறு கூறியுள்ளாா்...படவரி...மாஸ்கோ வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்காவுடன் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய விளாதிமீா் புதின்.

உக்ரைன் விவகாரம்: டிரம்ப், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!

உக்ரைன் போர் நிறுத்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு

பாகிஸ்தானில் தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து லாகூருக்கு வியாழக்கிழமை புறப்பட்ட பிஐஏ விமானம் பிகே-306 இன் பின்புற சக்கரங்களில் ஒ... மேலும் பார்க்க

அமெரிக்கா: தரையிறங்கிய விமானத்தில் தீ! 172 பயணிகள் நிலை?

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவுகிறது.முதல்கட்டமாக வெளியான தகவலின்படி, விமானத்தில் பயணித்த 172 பயணிகளும் பத்... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாா்: டுடோ்த்தே

ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தே கூறியுள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரை... மேலும் பார்க்க

எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது - வங்கதேச வெளியுறவு அமைச்சகம்

‘எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம்’ என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. வங்கதேசத்தில் வன்முறை... மேலும் பார்க்க