செய்திகள் :

`உங்கள் தயவால்தான் அவர் முதல்வராக இருந்தார்'- எஸ்.பி.வேலுமணி ஆலோசனை கூட்டத்தில் கொதித்த ஆதரவாளர்கள்

post image

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதன் ஒரு சில காட்சிகளை மட்டும், இன்று அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர். அந்தக் காட்சிகளில் பேசும் எஸ்.பி.வேலுமணி, “அ.தி.மு.க-வில் என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு பதவி வாங்க நான் தயாராக இல்லை. என்னுடன் 30 மாவட்டச் செயலாளர்கள் வந்தனர், அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. எனக்கு மட்டும் பதவி கொடுத்துவிட்டு, அவர்களை விட்டு விட்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? வீரமணி,  தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி சண்முகம் என அனைவரும் ஜாம்பவான்கள். அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை” என்கிறார்.

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

இதேபோல எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பேசும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பேசும் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள், “எங்களைப் போன்ற தொண்டர்களுக்கு பதவி தந்து நல்ல நிலைக்கு உயர்த்தியவர் நீங்கள். நீங்கள் நன்றாக இருந்தால், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் நன்றாக இருக்க முடியும். அ.தி.மு.க தொண்டர்களின் உயிர் மூச்சாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், நாங்கள் கட்டுப்படுவோம். உங்கள் தயவால்தான் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். உங்களுக்கு மதிப்பு இல்லாத இடத்தில் நாங்களும் இருக்க மாட்டோம். எங்களுக்கு கட்சி முக்கியம் அல்ல, பதவி முக்கியம் அல்ல. நீங்கள்தான் முக்கியம்.

கேள்வி கேட்பவர்களுக்கு எடப்பாடியார் பதவி தருவதில்லை. தி.மு.க உடன் சேர்ந்து கொண்டு, தி.மு.க-விற்கு ஜால்ரா போட்டு கொண்டிருக்கிறார். பழைய ஆட்கள் எல்லோரையும் நீக்கினார், யாரையும் சேர்க்கவில்லை. கட்சியை நாசம் செய்துவிட்டார். அ.தி.மு.க-விற்கு சாவுமணி அடிக்காமல் எடப்பாடியார் ஓயமாட்டார். தீர்க்கமான ஒரு நல்ல முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். தி.மு.க-வை யார் அதிகமாக எதிர்க்கிறார்களோ, அவர்களுடன் நாம் இருக்க வேண்டும்” என்றனர்.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க