செய்திகள் :

`உங்கள் தயவால்தான் அவர் முதல்வராக இருந்தார்'- எஸ்.பி.வேலுமணி ஆலோசனை கூட்டத்தில் கொதித்த ஆதரவாளர்கள்

post image

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதன் ஒரு சில காட்சிகளை மட்டும், இன்று அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர். அந்தக் காட்சிகளில் பேசும் எஸ்.பி.வேலுமணி, “அ.தி.மு.க-வில் என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு பதவி வாங்க நான் தயாராக இல்லை. என்னுடன் 30 மாவட்டச் செயலாளர்கள் வந்தனர், அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. எனக்கு மட்டும் பதவி கொடுத்துவிட்டு, அவர்களை விட்டு விட்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? வீரமணி,  தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி சண்முகம் என அனைவரும் ஜாம்பவான்கள். அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை” என்கிறார்.

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

இதேபோல எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பேசும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பேசும் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள், “எங்களைப் போன்ற தொண்டர்களுக்கு பதவி தந்து நல்ல நிலைக்கு உயர்த்தியவர் நீங்கள். நீங்கள் நன்றாக இருந்தால், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் நன்றாக இருக்க முடியும். அ.தி.மு.க தொண்டர்களின் உயிர் மூச்சாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், நாங்கள் கட்டுப்படுவோம். உங்கள் தயவால்தான் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். உங்களுக்கு மதிப்பு இல்லாத இடத்தில் நாங்களும் இருக்க மாட்டோம். எங்களுக்கு கட்சி முக்கியம் அல்ல, பதவி முக்கியம் அல்ல. நீங்கள்தான் முக்கியம்.

கேள்வி கேட்பவர்களுக்கு எடப்பாடியார் பதவி தருவதில்லை. தி.மு.க உடன் சேர்ந்து கொண்டு, தி.மு.க-விற்கு ஜால்ரா போட்டு கொண்டிருக்கிறார். பழைய ஆட்கள் எல்லோரையும் நீக்கினார், யாரையும் சேர்க்கவில்லை. கட்சியை நாசம் செய்துவிட்டார். அ.தி.மு.க-விற்கு சாவுமணி அடிக்காமல் எடப்பாடியார் ஓயமாட்டார். தீர்க்கமான ஒரு நல்ல முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். தி.மு.க-வை யார் அதிகமாக எதிர்க்கிறார்களோ, அவர்களுடன் நாம் இருக்க வேண்டும்” என்றனர்.

தவெக : தமிழகத்தில் ட்ரெண்ட் ஆகும் `ஆயா ராம் காயா ராம்' அரசியல்! - மக்கள் முடிவுக்கு என்ன மரியாதை?

மனம் போன போக்கில் கட்சி மாறும் அரசியல் காட்சிகளை வட இந்தியாவில் 'ஆயா ராம் காயா ராம்' என விமர்சிப்பார்கள். அந்த ஆயா ராம் காயா ராம் அரசியலை முதல்வர் விஜய் தமிழகத்திலும் வேகமெடுக்க வைக்கிறாரோ எனும் கேள்வ... மேலும் பார்க்க

மதுரை: `தவெக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும்; விசிக நிலைப்பாடு இதுதான்!' - திருமாவளவன்

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள... மேலும் பார்க்க

`தமிழக முதல்வர் விஜய்யைப் போல செய்வாரா முதல்வர் ரங்கசாமி?’ - கேட்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், ``தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து... மேலும் பார்க்க

`இரண்டு வருடங்களில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்துவிடும்; ஏனென்றால்..!' - நிர்மல் குமார்

தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், சென்னையில் இன்று (ஜூன்.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், பாஜக-வின் ஆதரவோடு ஆட்சி அமைக்கச் செயல... மேலும் பார்க்க

’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ - எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து சென்னை... மேலும் பார்க்க

``எடப்பாடியாரே, நீங்கள் எடுத்த அந்த தன்னிச்சையான முடிவு... விடைபெறுகிறேன்!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க-விலிருந்து 6-வது எம்.எல்.ஏ-வாக கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க முன்​னாள் அமைச்​சருமான எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நேற்று ராஜினாமா செய்​தார். இதற்​கான கடிதத்தை சென்னை தலை​மைச் செயல​கத்​தி... மேலும் பார்க்க