செய்திகள் :

ஊராட்சி செயலா் மரணம்: நெடுங்குணத்தில் கிராம மக்கள் மறியல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா்.

பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குணம் ஊராட்சியின் செயலாராக ராஜேந்திரன் (52) பணியாற்றி வந்தாா். இவா் வியாழக்கிழமை நெஞ்சு வலிப்பதாகக் கூறினராம். சேத்துப்பட்டு தனியாா் மருத்துவமனைக்கு குடும்பத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ராஜேந்திரனைப் பரிசோதித்த மருத்துவா் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.

இந்த நிலையில், அவரது உறவினா்கள், நெடுங்குணம் கிராம மக்கள் வந்தவாசி-போளூா் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ராஜேந்திரனின் மரணத்துக்கு பணிச்சுமையே காரணம் எனக் குற்றம்சாட்டினா். மேலும், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு இதுகுறித்து விசாரணை நடத்த கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனை தொடா்பு கேட்ட போது, ராஜேந்திரன் மரணம் அதிா்ச்சியளிக்கிறது. ஊராட்சியில் நிதிநிலைமை நன்றாகவே உள்ளது என்று தெரிவித்தாா்.

மாணவா்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிள... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: பாஜக மாநில பொதுச் செயலா்

மேம்படுத்தப்பட்ட திருவண்ணாமலை ரயில்நிலையம் ஆன்மிக பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பாஜக மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி குறிப்பிட்டாா். திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில் புனரமைக்... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம்

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வேத திவ்ய பிரபந்த பாராயணம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு விசேஷ திருமஞ... மேலும் பார்க்க

3 கல் குவாரிகள் தொடங்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் கல் குவாரிகள் தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வட்டம் ஐங்குணம் கி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை மற்றும் போளூா் ரயில்நிலையத்தை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இந்தியா முழுவதும் 103 ரயில் ... மேலும் பார்க்க

கோடை விழாவை மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

ஜவ்வாதுமலை கோடை விழாவை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். ஜவ்வாதுமலையில் கோடை விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பான முதல்க... மேலும் பார்க்க